Thursday, June 29, 2017

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி


அமைச்சர், காவலர் பெயர் இந்த குற்றசாட்டில் இருக்கின்றது, அவர்கள் மாநில அரசின் அங்கம், இது மாநில அரசின் மீதே பெரும் அவமானமான, அதிர்ச்சிகரமான குற்றசாட்டு


இதில் மாநில அரசே விசாரிக்கும் என்றால், குற்றவாளி தன்னைத்தானே விசாரிக்கட்டும் என விட்டுவிடுவது போலாகும், விட முடியுமா?




ஸ்டாலின் இதனைத்தான் சொல்கின்றார், இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு, மாநில அரசே சிக்கியிருக்கும் வழக்கு


ஸ்டாலின் சொன்னதில் அர்த்தம் இருக்கின்றது, எவ்வளவு பெரும் சீர்கேட்டில் தமிழகம் சிக்கியிருக்கின்றது என்ற உண்மை வெளிவந்துகொண்டிருக்கும் நேரமிது


சிபிஐ விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சிகள் வெளிவரலாம்


மத்திய அரசு நியாயமானது என்றால், தமிழக நலன் மீது அக்கறை உள்ளது என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டும்


ஆனால் செய்யுமா என்றால் செய்யாது, காரணம் கட்டி வைக்கபட்டிருக்கும் அதிமுக எனும் அடிமையினை அது அடித்து அடித்து பல மசோதாக்களில் கைநாட்டு வாங்கிகொண்டிருக்கின்றது, அதனை அவிழ்த்து விட அது தயாராக இல்லை


ஏம்மா தமிழிசை, நீங்களாவது குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோர கூடாதா?



No comments:

Post a Comment