Sunday, June 25, 2017

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி


அதாவது கைலாச மலை உடபட இன்னும் பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உண்டு, சீனா திபெத்தினை விழுங்கிய பின் அந்த இடங்களுக்கு இந்தியர்கள் விசா பெற்றுதான் செல்ல வேண்டும்


சீனா இனி இந்துக்கள் வர கூடாது என சொல்கின்றது, இதற்கு மேலும் கேட்டால் எங்கள் பூமியான அருணாசல் பிரதேசத்தில் இந்தியர்கள் வசிக்க விசாவா கொடுத்தோம்? அவ்வ்வளவில் நாங்கள் நல்லவர்கள் என்பார்கள்




எவ்வளவு பெரும் கொடுமை இது?


இந்துக்களின் புனித ஸ்தலத்தை சீனா அவமதிக்கின்றது, வழிபட விடவுமில்லை


ஆனால் இந்த சங் பரிவார், பாஜக, ஆர்.எஸ்.எஸ் எல்லாம் இதில் ஏதாவது பேசுமா? என்றால் பேசாது


சிவன் வாழும் கைலாய மலைக்கு எங்களை தடுப்பது யார் என கிளம்புவார்களா என்றால் ம்ஹூம்


மாறாக இங்கே மசூதி இடித்தல், தேவாலயங்களை எரித்தல் என செய்து தங்கள் மதத்தை புனித இடத்தை காப்பாற்றுவதாக சொல்லிகொள்வார்கள்


கிறிஸ்துவ ஆலயமோ, மசூதியோ இருந்தால் எங்கள் இடம் என சொல்லி அடம்பிடிப்பார்கள், அதனை மீட்டுவிட்டதாக வேறு மார்தட்டுவார்கள்


இதுதான் எங்கள் கடவுள் மனிதனாக பிறந்த இடம் என சொல்லி மசூதியினை எல்லாம் இடிப்பார்கள், ஆனால் சிவன் வாழும் மலையினை மறந்தே விடுவார்கள்


மற்றபடி கைலாசமலை எல்லாம் மீட்பு எல்லாம் பற்றி பேச்சே இல்லை, அட மீட்க கூட வேண்டாம், விசா தாருங்கள் என்று கேட்க கூடவா ஆளில்லை?


எல்லா வீரமும் இங்கிருக்கும் அப்பாவி மாற்றுமதத்தினர் மீதெல்லாம், இதுதான் இந்திய அரசியல்.,


வாக்கிற்காக மதத்தை வைத்து செய்யும் அயோக்கிய அரசியல்



No comments:

Post a Comment