ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் அக்கட்சியினரிடையே நன்றாக தெரிகின்றது, உச்சமாக சு.சாமி ரஜினிக்கு படிப்பறிவில்லை என கொந்தளித்திருக்கின்றார்
மிஸ்டர் சு.சாமி மோடி என்ன அமெரிக்க பல்கலைகழகத்தில் கோல்டு மெடல் வாங்கியவரா?
மோடியினை விடுங்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்களில் பலர் பள்ளியினையே தாண்டாதவர்கள்
கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, பன்னீர் எல்லோரும் பள்ளியினை தாண்டி கல்லூரியில் கால் வைக்காதவர்கள்
படிப்பு என்று தமிழக அரசியலுக்கு தகுதியாயிருந்தது?
விரைவில் வெறுப்பில், ரஜினி கருப்பாக இருக்கின்றார் அதனால் அரசியலுக்கு தகுதி இல்லை, ரஜினி தாடி சரியில்லை என்றேல்லாம் சொல்வார்கள்..
பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்
இவர்களுக்கு மட்டும் சிக்கலாகியிருக்கும் அதிமுகவினை விட்டால் தமிழகத்தில் என்ன வழி இருக்கின்றது?
உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை, என்னை விட்டால் எனக்கு யாருமில்லை என்ற நிலையில், பொன்னார் வீரவசனம் பேசிகொண்டிருக்கின்றார்.
ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலைப் பிரகடனத்தை மறக்க முடியாது: வானொலி உரையில் பிரதமர் மோடி
அந்த ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் பாபர் மசூதி இடிப்பும் அதனால் ஏற்பட்ட கலவரங்களையும், அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் ஓடிய ரத்த ஆறினையும் மறக்கவே முடியாது மிஸ்டர் மோடி
No comments:
Post a Comment