எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது சீனா, இந்து யாதீர்கர்களை தடுத்தது அடுத்து சிக்கிமில் ஆக்கிரமிப்பு, நாலந்துலா கணவாயினை மூடுதல் என அதன் அட்டகாசம் அதிகரித்துவிட்டது
மத்திய அரசு அதனைபற்றி மூச்சுவிட மறுக்கின்றது, ஒரு கண்டனமோ இல்லை எச்சரிக்கையோ கொஞ்சமும் இல்லை
தேச பக்தர்கள் எல்லாம் இதுபற்றி பேசமாட்டார்கள், அவர்கள் பற்று எல்லாம் பசுமாடு, அதனை வைத்து யாரையாவது போட்டு அடிப்பது, இதன் பெயர்தான் தேசபக்தி
மற்றபடி இத்தேசத்திற்கு எதிரான சக்திகளை எல்லாம் மறந்துவிட்டார்கள், பசுமாடே இப்பொழுது பிராதனம்
இந்நாட்டில் இந்த பசுமாடு இம்சைகள், இஸ்லாமியர் இந்து மோதல் என வலுக்க வலுக்க எல்லை பிரச்சினைகள் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கபடுகின்றன
இது கண்டிக்கதக்கது, அமைதியான தேசமே அந்நியரை விரட்ட முடியும், குழப்பமான தேசம் எதிலும் வெற்றி பெறாது
இது இந்தியருக்கான ஆட்சி என்றால் அமைதியினை கொண்டுவருவது சாத்தியம், அந்நியருக்கான ஆட்சி என்றால் இந்நாடு எக்கேடும் கெடட்டும் என விட்டுவிடுவார்கள்
இந்த அரசு அப்படி விட்டுவிடுவதை பார்க்கும்பொழுதுதான் அந்த சந்தேகம் வருகின்றது
இப்படி ஒரு ஆட்சியினை அமைத்து அதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினால் எல்லையில் எது செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என அந்நிய சக்திகள் நினைத்துத்தான் இந்த ஆட்சியினை அமர்த்தினார்களோ எனும் சந்தேகம் வலுக்கின்றது.
உண்மையில் அந்நிய நாடுகளுக்கு சாதகமான ஆட்சி நடக்கின்றது, இந்த ஆளும் கட்சி அந்நிய நாட்டிற்கு விசுவாசமான கட்சியோ என்னமோ?
இவர்களின் போக்கு அந்நிய நாட்டு கைக்கூலிகளின் ஆட்சி போலவே இருக்கின்றது
இதனை சொன்னால் நாம் தேசதுரோகி.
No comments:
Post a Comment