Wednesday, June 21, 2017

கோலி இனியாவது திருந்தட்டும்..

சீனியர்களை ஒதுக்குகின்றார், ஒரு மாதிரி தலைக்கணமாக நடந்துகொள்கின்றார் என்பது கோலி மீது கொஞ்ச காலமாக உள்ள சர்ச்சை


கோலியும் அதனை உறுதிபடுத்துவது போலவே நடந்துகொண்டார்


அது இன்று கும்ப்ளே ராஜினாமா வரை வந்து நிற்கின்றது, கோலி காரணம் என்கின்றார்கள், விஷயம் உறுதிபடுத்தபட்டு விட்டது




கிரிக்கெட்டில் அல்ல, எல்லா விஷயத்திலும் சாதித்தவர்கள் எல்லாம் ஆணவத்தை விட்டொழித்தவர்கள். ஆணவமிக்கவர்கள் அழிந்த சரித்திரம் உண்டே தவிர சாதித்த சரித்திரமில்லை


கடந்த சில வருடங்களாகவே உலகைவிட்டு மறைமுகமாக விலக்கி வைக்கபட்ட அணி பாகிஸ்தான், சொல்லிகொள்ளும்படியான வீரர்கள் இல்லாமல்தான் அது விளையாட வந்தது


ஆனால் தோல்வியில் துவண்டுவிடாமல் அற்புதமாக ஆடியது, ரமலான் நோன்பு நேரத்திலும் அவர்களின் ஆட்டம் அணல் பறந்தது, அவர்கள் வாழ்த்துகுரிய ஆட்டக்காரர்கள்,


அவர்கள் இருக்கட்டும், கோலி இனியாவது திருந்தட்டும்..



No comments:

Post a Comment