வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை கொல்ல பல காரணம் சொல்லபட்டாலும், அவன் கைப்பட எழுதிய காரணம் "ஜார்ஜ் மன்னரின் கைகூலியினை கொல்வோம், அதுவும் பசுமாட்டு இறைச்சியினை உண்ணும் பஞ்சன் ஜார்ஜ் மன்னரை இந்திய அரசராக ஏற்க மாட்டோம், அவனை விரட்டுவொம்" என்பதாக இருக்கின்றது
ஆக வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல, மாறாக அவன் மாட்டுகறி உண்பதுதான் அவரின் பிரச்சினையாக இருந்திருக்கின்றது என்பது இன்னொரு கோணம்
இன்று மாட்டுகறிக்காக வரிந்து கட்டுபவர்கள், அன்றே மாட்டுகறி உண்ணும் மிலேச்சன் என பிரிட்டிஷ் மன்னரை சாடிய வாஞ்சியினையாவது கொண்டாட வேண்டுமா வேண்டாமா?
ஆனால் சத்தமே இல்லை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சத்தமில்லை, தமிழக பாஜகவும் சத்தமில்லை
இவ்வளவிற்கும் அவனும் பிராமணன், வ.வே.சு அய்யர் எனும் பிராமணனின் சீடர்களில் ஒருவன், இந்தியாவில் காவி கொடிபறக்க வேண்டும் என உறுதியாய் இருந்தவர்களில் ஒருவன்
அவனை எப்படி மறக்கலாம்? வடக்கத்தியர்கள் மறக்கலாம்
மேடம் தமிழிசை, அன்றே மாட்டுகறிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரையே கொல்ல துணிந்த அந்த வாஞ்சிநாதனுக்கு பெரும் மரியாதை செலுத்த நீங்களாவது சொல்ல கூடாதா?
அந்த சுதந்திர வீரன் வாஞ்சிநாதன் தான், மாட்டுகறி பிரச்சினைக்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றார் என்பதுதான் சோகம்
இப்பொழுது சோகபடும் நிலையிலா இந்தியா இருக்கின்றது? வாஞ்சிநாதனை கொண்டாடி தீர்க்க வேண்டாமா?
என்ன மாட்டுகறி அரசியலோ தெரியவில்லை, அந்த அரசியலில் முன்னிறுத்தபட வேண்டியவர் நிச்சயம் வாஞ்சிதான், சாவர்க்காரை விட வாஞ்சியினைத்தான் முன்னிறுத்த வேண்டும்
செய்வார்களா? தமிழன் என்பதால் செய்யமாட்டார்கள், அந்த அமைப்பு அப்படி
ஆனால் தமிழிசை, ராசா, பொன்னார், வானதி போன்ற இன்னபிற கோஷ்டிகள் எல்லாம் அவர்களுக்கு ஜால்ரா தட்டிகொண்டே இருக்கும்..அவர்கள் அப்படித்தான்
No comments:
Post a Comment