கூடங்குளம் உதயகுமார் மீது பல சர்ச்சைகள் வருகின்றன,
அணுவுலை ஆபத்தானது என்பதால் அது வேண்டாம் என்பதை அதன் ஆபத்தை அறிந்த அனைவரும் சொல்வார்கள், அப்படி நாமும் அவரை முன்பு ஆதரித்தோம்.
அவர் புலிகளின் புகழ்பாடும் பொழுதே கொஞ்சம் சந்தேகம் வந்தது, வை.கோவினையும், சீமானையும் அழைத்து விருந்து வைத்த பொழுது ஆத்திரம் தான் வந்தது,
ஆனாலும் அவர் பாராளுமன்ற எம்பியாகவோ அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவோ ஆகிவிட்டால் அணுவுலை பிரச்சினையினை பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அவர் பழ.நெடுமாறனை பிரச்சாரத்திற்கு அழைத்தபொழுதே அவர் மீதான நம்பிக்கை தகர்ந்தது, அவர் பழ.நெடுமாறனை அழைத்தது பெரும் தவறு. தனக்கே 4 வோட்டு வாங்க முடியாத பழ.நெடுமாறன் இவருக்கு வாங்கி கொடுப்பாரா?
அன்றே அவரின் மீதான அபிமானம் வீழ்ந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பெரும் போராட்டங்களை செய்த அவர், பாஜக ஆட்சியில் பம்மிகொண்டதும் இன்னொரு முகம்
வெளிநாட்டு பண சர்ச்சையோடு இவர் பழ.நெடுமாறன் சீமான் வைகோடெல்லாம் நடபு கொண்டார் என்பதும் சாதாரண விஷயமல்ல
சீமானும், வைகோவும், பழ.நெடுமாறனும் எப்படிபட்ட வவ்வால்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை..
இடிந்தகரை என்பது கத்தோலிக்க கிராமம், ஏராளமான கிறிஸ்தவ சாமியார்களையும், கத்தோலிக்க ஆயர்களையும் கொடுத்த ஊர், அந்த உண்மையான போராட்டத்திற்கு மத சாயம் பூசபட்டது அதனால்தான்.
கடலோர கிறிஸ்தவ மக்கள் நியாயமான ஒரு விஷயத்திற்கு போராடிய போராட்டம் மதரீதியாக விமர்சிக்கபட்டதே அப்போராட்டத்தின் தோல்வி
இப்பொழுது வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு வந்ததா என சர்ச்சைகள் கிளம்புகின்றன, ரிபப்ளிக் டிவி வீடியோ வெளியிட்டுள்ளது
ஆனால் இது மூன்று மாதத்திற்கு முன்பு ஆராய்ச்சி மாணவி ஒருத்தியிடம் நான் பேசியது என்கின்றார் உதயகுமார், இடிந்தகரை போராட்டம் ஒய்ந்து நெடுநாள் ஆகின்றது என்பது வேறுவிஷயம்
எதுவாக இருந்தாலும் ஆதாரத்தோடு அவர் நிரூபிக்கலாம் , காட்சியில் கட்சிக்கு அப்பெண் நிதி தருவதாக சொன்னால் அது சமீபத்திய வீடியோ. காரணம் போராட்டம் நடக்கும்பொழுது கட்சி இல்லை
அட கட்சிக்கோ, இயக்கத்திற்கு தருகின்றேன் என சொல்லியிருந்தால் அது வேறுமாதிரியானது, இவரை மட்டும் அல்ல பலரை சேர்த்து பிடித்து அடிக்க வேண்டிய விஷயம்
அதாவது அங்கிள் சைமன் சொல்வார் அல்லவா , "உலகெங்கும் உழைக்கும் என் பிள்ளைகள் எனக்கும் என் கட்சிக்கும் நிதி தருகின்றார்கள், அப்படித்தான் இந்த எளிய தமிழ் பிள்ளைகளின் கட்சி நடக்கின்றது."
அதனையே இனி உதயகுமாரும் சொல்லலாம், எளிய வெள்ளைக்கார லண்டன் பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் எங்கள் கட்சி நடக்கும்
லண்டனிலிருந்து, கனடாவிலிருந்து சீமானுக்கும் அவரை போன்ற கும்பல்களுக்கும் எளிய தமிழ்பிள்ளைகளின் பணம் வரலாம், ஆனால் உதயகுமாருக்கு வர கூடாதா
சீமானின் வீடியோவிற்கு ஒரு நியாயம், உதயகுமார் வீடியோவிற்கு ஒரு நியாயமா?
தடை செய்தால் இருவரையும் தடை செய்ய வேண்டும்
புதிய தலைமுறை, தந்தி டிவி எல்லாம் மிக எளிதாக சீமானிடம் பெற்ற செய்தியினை, இந்த ரிபப்ளிக் டிவி மிக ரகசியமாக ஸ்டிங் ஆப்பரேஷன் என உதயகுமாரிடம் செய்ததாம்.
மிக பைத்தியகாரதனமான டிவியாக இருக்கும் போலிருக்கின்றது, இதற்கா இவ்வளவு ரகசிய ஆப்பரேஷன்?
No comments:
Post a Comment