Thursday, June 29, 2017

செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா....

ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி


மிஸ்டர் பழனிச்சாமி, அவ்வளவு தைரியமிருந்தால் ஜெயா வாழ்ந்த வீடு நினைவுசின்னம் ஆக்கபடும், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்கள் அரசுடமையாகக்பட்டு ஜெயா நினைவு மண்டபமாக மாற்றபடும்
என சொல்லுங்கள் பார்க்கலாம்.




செய்ய வேண்டியது அதுதான், மக்கள் சொத்தை உறிஞ்சி ஜெயா கட்டிய மாளிகையினை பாரீர் என அப்படித்தான் உலகிற்கு காட்ட வேண்டும்..


மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் என நீதிமன்றமே தீர்ப்பிட்டவருக்கு, மக்கள் பணத்தில் மணிமண்டபமா?


இதனை அரசு செய்தால் உலகமே தமிழகத்தை காரி துப்பாதா? கொலம்பியா போன்ற போதையினால் சீரழிந்த நாடுகளில் கூட நடக்காத இந்த கொடுமை தமிழகத்தில் நடந்தால் யார் ஏற்றுகொள்வார்கள்?


என்றோ கலைஞர் ஒரு கதை எழுதினார், செத்தும் கெடுத்தான் கணக்கன் என முடித்திருப்பார்


அப்படியாக‌ இருக்கும்பொழுதும் அரசு பணத்தை கொள்ளையடித்தவருக்கு , இறந்த பின்னும் அரசு பணத்தில் மண்டபமா?


செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா....


அதுவும் மெரீனாவில்தான் மண்டபம் வைத்து சிலை வைக்க வேண்டுமா?


ஏன் சோபான் பாபு சிலையினை எடுத்துவிட்டு (எடுக்காமல் கூட வைக்கலாம்) அங்கு ஜெயா சிலையினை வைத்தால் என்ன?


இதனையும் மீறி மண்டபம் கட்டுவோம் என்றால், மற்ற எல்லா உத்தம தலைவர்களின் மண்டபங்களை மூடிவிட்டு, ஜெயலலிதாவிற்கு கட்டுங்கள்


மணிமண்டபத்திற்கான அர்த்தமாவது மிஞ்சும்.



No comments:

Post a Comment