Friday, June 16, 2017

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம் இன்னும் பிற ...

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம்


அம்மணிக்கு புழல்சிறையினை பற்றி சரியாக தெரியாது போல, தெரிந்தால் இப்படி எல்லாம் உண்ணாவிரம் இருக்கமாட்டார்.


ராம்குமார் அறையின் பக்கத்து அறை வேண்டுமா என கேட்டால் அதன் பின் அம்மணி புழல் சிறைக்கு வருவார்?






அம்மா பெயரில் பெட்ரோல் பங்குகள் அமைக்கபடும் : தமிழக அரசு


ஏற்கனவே பெட்ரொல் பங்குகளில் மோசடி, கலப்படம், பதுக்கல் என பல சர்ச்சைகள் இருப்பதால் அதற்கு அம்மா பெயரை தவிர இன்னொரு பொருத்தமான பெயர் கிடைக்காது


முறைகேடாக பதுக்கி வைக்கும் நிலையங்களுக்கு மிக பொருத்தமான பெயர் அது, தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்






மனம் சோர்வுற்ற மாலை நேரத்தில் நாற்காலியில் சாய்ந்திருக்கும் பொழுது, காதோரம் "பூங்காற்று திரும்புமா..." என மாலேசியா வாசுதேவன் குரலில் அந்த பாடல் கேட்கும்பொழுது மனதில் மயில் இறகால் வருடுவது போல ஒரு இதம்..


அந்த இசையிலே மனம் லேசாகின்றது, இளையராஜாவின் இசை ஆன்மாவில் ஊடுருவும் என்பது மிகையல்ல..






 

No comments:

Post a Comment