Thursday, June 22, 2017

உதயகுமார் அந்த கும்பலோடு கைகோர்த்தது தெரிகின்றது

ரஜினியை எதிர்த்துப் பேசியதால் தன்னை தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதாகக் கூறியிருக்கிறார் சுப உதயகுமாரன்.


எல்லா மனிதனும் கோபத்தின் உச்சியில் தவறாக கொந்தளிப்பார், உதயகுமாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌


ரஜினிக்கு என்றுமே எதிர்ப்பு உண்டு, எம்ஜிஆர், ஜெயா,ராமதாஸ், சீமான், பாரதிராஜா என அந்த வரிசை பெரிது




அப்படி ரஜினியினை எதிர்த்தது காரணமானால் இவர்கள் எல்லோரையும் எதிர்த்துவிட்டுத்தான் உதயகுமார் பக்கம் வந்திருப்பார்கள்


சீமானையும், பாரதிராஜாவினையும், ராமதாசையும் விட்டுவிட்டு இவரை ஏன் சீண்ட போகின்றார்கள்


இவரால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் இல்லை, இவர் மட்டுமல்ல எவராலும் ரஜினிக்கு பாதிப்பில்லை, ரஜினிக்கு ரஜினிதான் பலம் மற்றும் பலவீனம்


ஆக இப்படியெல்லாம் கதைக்கு உதவாத, பொருந்தாத விஷயங்களை விட்டுவிட்டு பொருத்தமான பதிலை சொல்வது உதயகுமாருக்கு நல்லது


சீமான், நெடுமாறன் வரிசையில் உதயகுமாரும் ரஜினியினையே சீண்டுகின்றார், விஷயம் எங்கோ இடிக்கின்றது


உதயகுமார் அந்த கும்பலோடு கைகோர்த்தது தெரிகின்றது, படுகுழியில்தான் விழுவேன் என அடம்பிடிப்பவரை என்ன செய்ய முடியும்?



No comments:

Post a Comment