சிம்புவின் "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்" என வந்த படம் இனி "இவன் திருந்தாதவன்" என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள்.
சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும்.
நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம்.
"கடவுள் இருக்கான் புள்ள" என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம்.
மைக்கேல் ராயப்பனுக்கும், விஜயகாந்திற்கும் என்ன தொடர்பு என யோசிப்பீர்களானால் நீங்கள் நமது பதிவுகளை படிப்பவராக இருக்க முடியாது
இனி நயந்தாராவும் மைக்கேல் ராயப்பனும் விழாக்களில் சந்தித்துகொண்டால் இருவருமே அர்த்தத்தோடு சிரிக்கலாம்..
சிம்புவின் படம் இணையத்தில் வந்துவிட்டது, இணையத்தில் விட்டது விநியோகிஸ்தர்கள் தரப்பாக கூட இருக்கலாம், தியேட்டருக்குத்தான் வரமாட்டார்கள், அப்படி வராத மக்களை இணையத்தில் போட்டு தண்டிப்போம் என இறங்கியிருக்கலாம்
கொஞ்ச நேரம் படம் பார்ப்பதற்குள்ளே முடியவில்லை, அப்படி ஒரு இம்சை
ஐ.எஸ், அல்கய்தா, லஷ்கர் போன்ற கொடூர தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதை விட இந்த படத்தை 10 முறை பார்க்க வைக்கலாம், அது மரண தண்டனையினை விட கொடுர தண்டனை.
பெங்களூர் சிறை சின்னம்மாயினை இரு முறை பார்க்க வைத்து தண்டித்தால் போதும், அவர் அரசியலை விட்டே ஓடிவிடுவார்.
No comments:
Post a Comment