மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக புறப்பட்டு சென்றார் மோடி : செய்தி
மிக சரியாக இஸ்லாமியரின் விழாகாலங்களில் மட்டும் டெல்லியில் இருக்காமல் இவர் ஓடிவிடும் மர்மம் என்ன?
அவருக்கு இஸ்லாமியர் மீது அபிமானம் இல்லாமல் இருக்கலாம், தனிபட்ட முறையிலும் கட்சி நிலையிலும் இஸ்லாமியர்களை அவர் தவிர்க்கலாம்
ஆனால் பொறுப்பான பிரதமர் என்ற நிலையில், இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உச்சமான தலைவர் எனும் நிலையில் மோடி இப்படி செய்வது சரியே அல்ல, இது பொறுப்பற்ற தனம்
அவர் இந்துக்களின் பிரதமர் அல்ல, இந்தியாவின் பிரதமர் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்
இந்நாட்டு இஸ்லாமியர் இந்நாட்டு குடிமக்கள், அந்த வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு
தன்னாட்டு குறிப்பிட்ட குடிகளின் மீது வெறுப்பு காட்டும் எந்த நாடும் உறுப்படாது, இலங்கை பர்மா என எல்லா நாடுகளும் அப்படி நாசமாயின
இப்படி அம்மக்களை பிரதமர் ஒரு மாதிரி நடத்துவாரானால் இந்நாட்டில் எப்படி அமைதி திரும்பும்? எப்படி இந்நாடு செழிக்கும்? அவர்கள் எப்படி இந்தியராக உணர்வார்கள்?
இங்கு அம்மக்களை ஒதுக்கிவிட்டு இவர் உலகின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு எப்படி செல்லமுடியும்? இஸ்லாமிய நாடுகள் எப்படி இங்கு முதலீடு செய்யும்?
இந்நாட்டினை உலகிலிருந்து துண்டித்து நாசமாக்கும் செயலில் மோடி இறங்கியிருக்கின்றார்.
மகாத்மா ஒரு இந்து, இந்துவாக வாழ்ந்தவர் ஆனால் மற்ற எல்லா மதத்து மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து நடந்தார், அப்படிபட்ட தலைவனே இந்நாட்டிற்கு தேவை.
அரசியலில் ஒன்று நேரு போல நாத்திகனாகவோ அல்லது மன்மோகன் சிங் போல எல்லா இந்திய மதங்களுக்கும் பொதுவான மனிதராக ஒரு பிரதமர் இருக்க வேண்டும்
பல இனங்களும், மொழிகளும், மதங்களும் வாழும் நாட்டில் அப்படி எல்லோரையும் அணைத்து செல்லும் பிரதமரே வேண்டும்
அன்று காந்திதலமையில் வெள்ளையனே வெளியேறு, இந்தியா இந்தியருக்கே என சொன்னதன் பெயர் நாட்டுபற்று
இன்று இந்தியா இந்துக்களுக்கே , மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என சொல்வதன் பெயர் நாட்டுபற்று
ஏதும் சொன்னால் நம்மை தேசதுரோகி என்பார்கள்.
உண்மையில் மோடி செய்வதுதான் இந்த பல்லின மக்கள் கலந்து வாழும் இந்திய திருநாட்டிற்கு செய்யும் பெரும் துரோகம்...
ரம்ஜானுக்கு அமெரிக்கா ஓடிவிட்டார் மோடி, அடுத்து பக்ரீத்திற்கு சீனாவோ ரஷ்யாவோ இப்பொழுதே முன்பதிவு செய்து வைத்திருப்பார்...
No comments:
Post a Comment