சட்டசபையில் மின்விவாதம் நடந்திருக்கின்றது, ஆளும் கட்சி வழக்கம் போல செய்வோம் என்றிருக்கின்றது
திமுக உறுப்பினர் ஆஸ்டின் என்பவர், இட்லி அவிப்பது போல் எளிதானது அல்ல மின்சார திட்டம் என சொல்லியிருக்கின்றார்
உடனே தனபால் திமுகவினருக்கு சமைக்கவும் தெரியுமா என கலயாய்த்தாராம், திமுகவினரும் சிரித்து சமாளித்தார்களாம்
இதுவே கலைஞர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா?
"ஏன் அதிமுகவினருக்கு சமைக்க தெரியாதா? சிறையிலிருக்கும் உங்கள் பொதுசெயலாளரே முன்னாள் முதல்வருக்கு சமைத்து கொடுத்தேன் என அவரே சொல்லியிருந்தார்.
இட்லி அவிக்க மாவு தயாராக இருக்கவேண்டும், கடந்த 6 வருடமாக என்ன அரைத்தீர்கள்? அரைத்த மாவினை கூட அரைக்கவில்லை
இனியும் தமிழர் தலையில் நீங்கள் மிளகாய் அரைக்க நினைக்கின்றீர்களா? விடமாட்டோம்"
இதன் பின்னால் தனபால் பேசுவார்?
No comments:
Post a Comment