Thursday, June 29, 2017

கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்...

குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் மக்களின் எதிர்ப்பினை மீறி கல்யாண மண்டபம் கட்ட முயன்ற ஆயரை முற்றுகையிட்டமக்கள், திருச்சி ஆயர் தலைமறைவு


அதாவது மக்கள் ஆலயத்தை விரிவாக்க சொன்னால், ஆயர் நான் மண்டபம் தான் கட்டுவேன் என பிரச்சினை செய்ததால் மக்களுக்கு கோபம் வந்து விரட்டுகின்றார்களாம்


இயேசு நாதர் சாய இடமின்றி அந்தரத்தில் கோவணமின்றி இறந்தவர், அக்கால போதகர்கள் மாற்று உடையின்றி கையில் சிலுவையும் ஜெபமாலையுமாக இந்தியா வந்தார்கள்.




அக்கால கிறிஸ்தவ துறவி எவனுக்கும் அரை சென்ட் நிலமில்லை, சொத்து இல்லை. ஆனால் கிறிஸ்தவம் அவர்களிடம் உண்மையாக இருந்தது


இன்று இவர்களுக்கு இவ்வளவு ஆசை, இவ்வளவு பணத்தேவை.


ஆயன் என்றால் மேய்ப்பன் என பொருள், என் ஆடுகளை பாதுகாத்துகொள்ளுங்கள் என இயேசு சொன்ன அர்த்தம், என் மக்களை, என் பக்தர்களுக்கு பொறுப்பாய் இருந்து வழிநடத்துங்கள் என்பது


இவர்களோ இந்த ஆடுகளிடமிருந்து எவ்வளவு கறக்கலாம், என்ன விலை போகும்? வெட்டினால் என்ன தேறும்? என்பது போன்ற கசாப்பு கணக்கு போடும் ஆயராகிவிட்டார்கள்


ஆயர் என்றால் ஆடுகளை விற்று ஆட்டையினை போடவேண்டும் என இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள், அப்படி இவர்கள் பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது,


இயேசு ஆயர்கள் என சொன்னதை, இவர்கள் இந்த பொருளில் எடுத்துவிட்டார்கள்.


கத்தோலிக்க ஆயர்கள் திருமணம் செய்வதில்லை, பின் ஏன் திருமண மண்டபம் கட்டுவதில் இவ்வளவு ஆர்வம்?


திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டினால், எல்லா கமிஷனும் சேர்த்து ஒரு தொகை அடித்துவிடலாம், வசூலிக்கலாம்


ஒரு பாலம் கட்டினால் அரசியல்வாதிக்கு கமிஷன், தண்ணீர் தொட்டி கட்டினால் பஞ்சாயத்து தலைவருக்கு கமிஷன், அப்படி திருச்சபை கட்டிடங்களில் ஆயருக்கும் கமிஷன் + வசூல்


நாட்டில் அரசியலும் கெட்டுவிட்டது, அதனை பார்த்த ஆயர்களும் அரசியல்வாதி ஆகி கிறிஸ்துவத்தையும் கெடுத்துவிட்டார்கள்


கிறிஸ்துவினை போதித்துகொண்டு, வணங்கிகொண்டே சாத்தானின் பாதையில் செல்கின்றார்கள் இவர்கள்


இவர்களை பார்த்து விரைவில் உண்மையிலே கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்.



No comments:

Post a Comment