இதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் நதியாவினை குஷ்பூ பேட்டி எடுக்கின்றார், கொஞ்சம் பழைய நிகழ்ச்சி போல, சிறப்பு நாள் நிகழ்வாக மறுஒளிபரப்பு,
நிகழ்ச்சிக்கு நல்ல பொருத்தமான் பெயர், "நினைத்தாலே இனிக்கும்", பின் என்ன? குஷ்பூவினை நினைத்தால் கசக்கவா செய்யும்?
குஷ்பூவின் கேள்விக்கு நதியா பதிலளிக்கின்றார்
இருவரும் சமகாலத்தவர்கள், ஆனால் இன்று குஷ்பூ அப்படியே இருக்கின்றார், நதியா முகத்தில் முதுமை கோடுகள்
குஷ்பூவின் பூமுகம் அப்படியே இருக்கின்றது
இன்னொரு "வருஷம் 16"ல் 30 வருடம் கழித்தும் குஷ்பூ நாயகியாக நடிக்க ரெடி, ஆனால் இன்னொரு "பூவே பூச்சுடவா" காவியத்தில் நடிக்க நதியாவால் முடியாது
வேண்டுமானால் பத்மினி வேடத்தில் நதியாவினையும், நதியாவின் பேத்தி வேடத்தில் குஷ்பூவினையும் நடிக்க வைக்கலாம், அழகாக பொருந்தும்
இப்படி ஒரு முக்கால நாயகி இனி என்றுமே தமிழ்திரைக்கு சாத்தியமில்லை
ஒரே நிலா..ஒரே தாழ்மஹால்..ஒரே குஷ்பூ
அழகிய கடற்கரை ஆயிரம் காணல்
குளிந்த மலை உச்சி கோடிகள் காணல்
நாகரீக மாளிகை நாலு கோடி காணல்
பிரியாணி தட்டு ஆயிரம் சுவைத்தல்
மீன் வறுவல் பல நூறு சுவைத்தல்
விடுமுறை என்று தூங்கி கழித்தல்
இத்தனை கோடி இன்பமும் தாண்டி
இன்பம் எதுவென்று நோக்கின்
குஷ்பூ படமொன்று டிவியில் காணல்
இந்த கோஷத்துடன் பல படங்களை காண்கின்றேன், சின்னதம்பி முதல் சிங்கார வேலன் வரை கண்டுகொண்டிருக்கின்றேன்
சில காட்சிகளில் அசால்ட்டாக அழகின் உச்சிக்கு செல்கின்றார் குஷ்பூ, இவ்வளவு நாளும் கட்டிய டிவி பில், இணைய பில் வீண்போகவில்லை, இப்படி படங்கள் கிடைக்குமென்றால் எவ்வளவு கட்டணமும் செலுத்தலாம்
அட என்ன ஒரு அழகு, கம்பன் வரிகளில் சொல்வதென்றால்
"மையோ மரகதமோ
மழை முகிலோ வான் எழிலோ
.....
...
.....
அய்யோ..... இவள் அழியா அழகுடையாள்"
No comments:
Post a Comment