உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக
பெருநாள்
இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்
நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள்,
வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும்
இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை
நண்பர்கள் அதனை பின்பற்றி மிக உற்சாகமாக மிக மகிழ்வாக தங்கள் உறவுகளுடன் கூடி ரமலானை கொண்டாடட்டும்
எல்லோருக்கும் அய் துல் பித்ரி நல்வாழ்த்துக்கள்
ஆயிரம் நடிகை வந்தாலும் குஷ்பூவிற்கு ஈடாகாது, ஐந்தாயிரம் வகை பிரியாணி இருந்தாலும் இஸ்லாமிய மக்கள் கொடுக்கும் பிரியாணிக்கு ஈடாகாது
அவர்கள் நன்றாக சமைப்பார்கள் என்பதை விட, அவர்களின் வெள்ளந்தியான அன்பு அதற்கு கூடுதல் சுவை கொடுக்கும்.
என்னதான் அரசியல் எதிரிகள் என்றாலும் சிலர் கலவரம் என்று வந்தால் குறி வைப்பது அவர்களின் பிரியாணி அண்டாவினைத்தான்.
அதன் சிறப்பு அப்படி
இந்த முகநூலில் ஏராள இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும், இன்று நமக்கு பிரியாணி கொடுக்க முடியாது
ஒரு நாள் அவர்கள் வீடுகளுக்கே சென்று மணக்க மணக்க , வயிறு கனக்க கனக்க உண்டுவிட வேண்டியதுதான்
மறுபடியும் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
தெரியும் பிறை எல்லோர் வாழ்விலும் வளர்பிறையினை மட்டும் கொடுக்கட்டும்
No comments:
Post a Comment