Thursday, June 22, 2017

கருணா, சசிகலா, கருணைக்கொலை, கிரிக்கெட்...


சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி


அதாவது சிறையில் இருக்கும் குற்றவாளி இந்திய குடியரசு தலைவர் தேர்தலை நிர்ணயிப்பாராம்.


அது என்ன ஜெயில் கைதிகளுக்கான சங்க தேர்தலா? அல்லது குற்றவாளிகளுக்கான அமைப்பு தேர்தலா?





சசிகலா எனும் குற்றவாளி சொல்லி இவர் வாக்களித்து ஒரு குடியரசு தலைவர் அமர்ந்தால் அது இத்தேசத்தின் எவ்வளவு பெரும் அவமானம்?

சிறைகைதி சொல்லி இவர் செலுத்தும் வோட்டு செல்லாது என இந்திய ஆணையம் அதிரடியாக அறிவிக்க வேண்டும்..



என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்… ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை


தூக்கு தண்டனை வேண்டாம் என்றுதான் இவரை இன்னும் உயிரோடு வைத்திருக்கின்றது இந்த நாடு, இவர் இப்படி சொன்னால் சிலர் இங்கு பொங்குவார்கள் என்பது இவரின் திட்டமாக இருக்கலாம்


இவர் இலங்கையர், இலங்கை அரசு ஒரு வார்த்தையும் இவர்களை பற்றி ஒருநாளும் சொன்னதில்லை சொல்லவும் சொல்லாது





தூக்கு வேண்டாம் என்றவர், இப்பொழுது வேண்டும் என்கின்றார். சட்டம் என்ன சொல்லுமோ தெரியவில்லை




 



இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை பலப்பரீட்சை


இரண்டுமே கிட்டதட்ட செத்துபோன அணி, இதில் கொஞ்சம் உயிர் யாருக்கு இருக்கின்றது என சோதிக்கும் காரியம் நாளை நடக்க இருக்கின்றது







No comments:

Post a Comment