Sunday, June 18, 2017

திரு AVT ஜனார்தனன் அவர்கள் பதில்




















 திரு.Stanley Rajan ...
முகநூல் நட்பில் அனைவரும்
அறிய வேண்டிய நல்ல அறிவாளி, இந்தியாவிலிருந்து மலேஷியா
செல்லும் நட்புகள் அவரை
காண்பதற்காகவே நேரம் ஓதுக்கி
சந்தித்து வருகிறார்கள்,
பொலிவியா பற்றி எழுதுவார்,



ட்ரம்ப்பை விமர்சிப்பார், மோடியின் டிமான்டேஷன் ராஜபக்சேவின் கையலாகாத்தனம் சைனாவின் அத்துமீறல் பாக் .கின் சித்துவிளையாட்டு மலேஷியாவின் அரசியலமைப்பு மதங்களின் அத்துமீறல்கள், நம் சாதீய சண்டைகள் அரபு நாடுகளின் வளம், சிரியா இஸ்ரேல் தென்கொரிய அரசியல் அத்தனையும் அத்துப்படி.

சீமானையும், வைகோவையும் கலாய்ப்பார்,திமுக வின் அதிலும் கலைஞரின்மனசாட்சி போல பேசுவார்,அதிமுகமதிமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் திக யாரையும் விட்டுவைக்க மாட்டார். டி.ஆரைகொண்டாடுவார் , சிம்புவை வம்பிற்கு இழுப்பார்,

சிவாஜி ரசிகர்.எம்.ஜி.யாரை மகோரா என்பார், கமலின் அறிவையும்,ரஜினியின் புகழையும்
வியக்கிறார், கிரிக்கட்டையும் அலசுகிறார்,


எழுத்தாளர்கள், கவிதாயினிகள் இவர் நட்பில் உண்டு, பழையஜெயப்பிரதாவை வர்ணிப்பார்இப்போதைய குஷ்பு விற்குசம்பளமில்லாத பி.ஆர்.ஓ. 

அவரை பேசவைத்து நிறைய விஷயங்களை அறிய முயன்ற என்னை பேசவைத்து கேட்டார் ..


அதுதான் அவருடைய வெற்றி ...

அவையடக்கத்திற்காக கூறவில்லை, என்னை மிகவும்
புகழ்ந்து எழுதி விட்டார்.


அதற்கு தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

இந்த எளியவனுக்கு அளித்த மரியாதைக்கு நன்றி .. நன்றி..












 


 

No comments:

Post a Comment