Tuesday, October 25, 2016

வருண் : இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா??

https://youtu.be/3MGUDEUvM1U


Stanley Rajan's photo.Stanley Rajan's photo.


வருண் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன, இந்திராவின் பேரன் அவர், இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகி இருக்ககூடிய அவரின் விதி இப்படி வீடியோ வடிவில் வந்திருக்கின்றது.


இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி.


வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு.


காங்கிரஸ் மூத்த தலைவர்களே அவரிடம் அஞ்சி ஒடுங்கி இருந்தார்கள் என்கிறது காங்கிரஸ் வரலாறு, நிச்சயமாக அப்படியும் காங்கிரசில் ஒரு பக்கம் இருக்கின்றது


இவ்வளவிற்கும் கட்சியில் சஞ்சய்காந்தியின் பதவி என்னவென்றால் ஒன்றுமே இல்லை. ஆனால் கட்சி விவகாரங்களில் அவரின் கை ஓங்கியே இருந்திருக்கின்றது.


இந்திரா பல இடங்களில் அவரை கையாளமுடியாமல் தடுமாறி இருக்கின்றார், பிள்ளைபாசம் அவரையும் தடுமாற வைத்திருக்கின்றது


பஞ்சாபிய பெண்ணும், தொடக்கத்தில் மாடலுமான மேனகாவுடன் திருமணம் நடந்தது, மேனகாவின் தந்தை இந்திய ராணுவ அதிகாரி, சஞ்சய் இருக்கும் வரை இந்திரா மேனகா மோதல் இல்லை.


ஆனால் சஞ்சய் எதிர்பாரா விதமாக விமான விபத்தில் இறந்தார். நாள்தோறும் சிறிய விமானத்தில் பறந்துவிட்டு வருவது அவரின் வாழ்க்கை முறையில் ஒன்று, அன்று அப்படி பறந்த விமானம் விபத்துகுள்ளாகி இறந்தார் சஞ்சய்


அன்று மேனகாவின் வயது 24, இந்த வருண்காந்தி 3 மாத குழந்தை.


அதன் பின் இந்திரா மேனகா மோதல் தொடங்கியது, சோனியா வந்தது, சஞ்சயின் இடத்தினை மேனகா பிடித்துவிடுவார் என இந்திரா அஞ்சினார் என ஏக சுவாரஸ்ய ஹேஸ்யங்கள் உண்டு


ஆனால் பஞ்சாப் பிரச்சினை தொடங்கிய காலமது, பஞ்சாபியர் மேனகா மூலம் தனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என சந்தேகித்ததில் இந்திராவின் கோபபார்வைக்கு ஆளானார் மேனகா


எவ்வளவு நெருக்கடி என்றால் பாஸ்போர்ட்டினை முடக்கும் அளவிற்கு சென்றார் இந்திரா


மேனகாவும் சஞ்சய் ஆதரவாளர்களை இணைத்து "சஞ்சய் விசார் மஞ்ச்" (சஞ்சய் எண்ண மேடை) என ஒன்றை தொடங்கி அரசியலில் இறங்கினார், ஆதரவும் இருந்தது.


ஆனால் இந்திரா படுகொலை, ராஜிவ் வரவு என சூழல்கள் மாற மாற மேனகாவால் பெரும் அரசியல் செய்யமுடியவில்லை, ஜனதாவிலும் பின் பாரதீய ஜனதாவிலும் அடைக்கலமானார்


விலங்குகள் மீதான நலன் மூலமே இன்று அறியபட்டிருக்கும் மேனகாவிற்கு அன்று பெரும் வாய்ப்பு இருந்தது.


அந்த விமான விபத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்று நிச்சயம் காங்கிரசின் கட்டுபாடு மேனகா இல்லத்திடமே இருந்திருக்கும், சோனியா, ராஜிவ், ராகுல் பிரியங்கா எல்லாம் வந்திருக்க முடியாது


ஆனால் விதி அது அல்ல.


விதி மேனகாவின் இடத்தினை சஞ்சய் மரணம், இந்திரா மரணம், ராஜிவ் மரணம் என பயணித்து அந்த இடத்தினை சோனியாவிடம் கொண்டு சேர்த்துவிட்டது, அந்த இடம் நிச்சயம் மேனகாவிற்கான இடம்


சஞ்சய் மட்டும் இருந்திருந்தால் பெரும் அரசியல் பிரளயமே நடந்திருக்கும், அவர் காட்டிய வேகமும் அவரின் நடவடிக்கைகளும் பெரும் சர்வாதிகார தோரணையானவை


அம்மனிதரின் மகனா இந்த வருண்காந்தி என பார்க்கும்பொழுது பரிதாபமே தோன்றுகின்றது.


சிக்கிகொள்ளாமல் தப்பு செய்யும் வரைதான் அரசியலில் நீடிக்கமுடியும், சிக்கிகொண்டால் தப்புவதற்கு பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்.


இன்றும் இந்திரா குடும்பத்திற்கு வட இந்தியாவில் அபிமானம் உண்டு, மேனகா காந்திக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு, அவரை கட்சிகள் முன்னிலைபடுத்த அதுதான் காரணம்


இன்று வீடியோ போட்டு வருண் காந்தியினை வறுத்தெடுக்கின்றார்கள், அவரை முன்னிறுத்திய பிஜேபியும் கை பிசைந்து நிற்கின்றது


சாமியார்கள் என்றால் புன்னகைத்து கடந்துவிடுவார்கள், நடிகைகள் என்றால் நான் அவள் இல்லை என சொல்லிவிடுவார்கள், இது அரசியல் சர்ச்சை, வருண் ஏதோ சொல்லி சமாளித்துகொண்டிருக்கின்றார்


ஆனால் இவை எல்லாம் காலவோட்டத்தில் மறைந்துவிடும், எனினும் மேனகாவின் மனதில் அந்த காலங்கள் நினைவுக்கு வரலாம்


அதாவது மாடல் நடிகை என்ற காலங்களில் மேனகா பத்திரிகையாளராகவும் இருந்தார், பல விஷயங்களை எழுதினார், மிகபெரும் பலமாக பிண்ணணியில் சஞ்சய்காந்தி இருந்தார், அவர் டெல்லி சுல்தான் போன்ற காலங்கள் அவை


போதாதா, சூர்யா எனும் அந்த பத்திரிகையில் மிக துணிச்சலான செய்தியினை வெளியிட்டிருந்தார் மேனகா, அந்த தைரியம் சஞ்சய் கொடுத்தது


அதாவது இந்திராவிற்கு பெரும் குடைச்சல் கொடுத்த மொரார்ஜி தேசாய் கூட்டத்தில் பாபு ஜெகஜீவன்ராம் என்றொருவர் அமைச்சராக இருந்தார், அதுவும் பாதுகாப்பு அமைச்சர்


(மிசா காலங்களில் காங்கிரசில் அதிருப்தி இருந்தது காமராஜர் போலவே பலர் முணுமுணுத்துகொண்டிருந்தனர்)


அவர் இந்திரா அரசிலிருந்து விலகியே மொரர்ஜி தேசாய் பின்னால் சென்றார், அங்கு பெரும் வரவேற்பு இருந்தது, அவர் பிரதமர் ஆவதற்கும் வாய்ப்பு இருந்த காலங்கள்


ஆனால் காங்கிரஸ் துரோகி


அவரின் மகனுக்கும், டெல்லி பல்கலைகழக மாணவிக்கும் தகாத உறவு இருந்ததாக படங்களோடு தன் பத்திரிகையில் செய்தி போட்டு பெரும் பரபரப்பினை செய்தார் மேனகா


அந்த புகைபடங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தின, ஜெகஜீவன் ராம் கண்ணீர் விட்ட கொடுமையும் நடந்தது


அந்த வரலாறு 39 வருடம் கழித்த்து இன்று திரும்பியிருகின்றது,


திரும்ப திரும சுழலுவதுதான் கால சக்கரம், சுழன்றிருக்கின்றது


மேனகா கண்களுக்குள் இவை எல்லாம் வந்து செல்லலாம்


ஆனாலும் வருண் காந்தி, அந்த சர்வாதிகார தந்தையினை ,, பார்த்திருக்க கூட மாட்டார், 1970களை அறிந்தவர்கள் சஞ்சயின் பிள்ளையினை, இந்தியாவினை அலறவைத்தவரின் பிள்ளையினை வருங்காலம் இப்படி போட்டு அடிக்கும் என கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள்


காலம் எப்படி எல்லாம் விளையாட்டு காட்டிகொண்டிருக்கின்றது.


நிச்சயமாக காங்கிரசில் அவருக்கொரும் பெரும் இடம் இருந்தது, அது தவறி சோனியா ராகுல் கைகளுக்கு சென்றுவிட்ட்டது


வருணை நினைக்கும் போதெல்லாம்


"இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா.." எனும் வரிகள் காதோரம் கேட்கத்தான் செய்யும்








 கொசுறு 





நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

ஈழ தமிழரைத்தான் திருமணம் செய்தார், ஒருவேளை தெலுங்கச்சியே வெளியேறு என ஏதும் சொல்லி தொலைத்து விட்டார்களோ?

விரைவில் சின்னதிரைக்கு ஒரு நடிகை ரெடி




 

நான் ஏன் கலைஞரை பற்றி எழுதுகிறேன்?

நீ ஏன் கலைஞரை பற்றி எழுதுகின்றாய், திமுக காரனாய் மாறிவிட்டாயா? எவ்வளவு கொடுத்தார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள்.


திமுக எனும் கட்சியோ, அதன் கொள்கைகளோ (அப்படி ஒன்று இருந்தால்) ஒரு நாளும் எம்மை ஈர்த்ததில்லை, தமிழகத்தின் பல குழப்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை


ஆனால் சில விஷயங்களை ரசிப்பது போல, கலைஞரை ரசிக்க முடிகின்றது. லாராவோ, டெண்டுல்கரோ அந்நாளைய வாசிம் அக்ரமையும், வாக்கர் யூனுஸையும் அற்புதமாக சமாளிக்கும்பொழுது கை தட்டுவோமே அப்படி தட்ட தோன்றுகிறது அவ்வளவுதான்




நான் என்ன ரசிப்பது, அந்நாளைய திமுக எதிரியான இந்திரா காந்தியே சில இடங்களில் புன்னகைத்தார்


அது மிசா காலம், யாரையும் சிறையில் அடைக்க காவல்துறைக்கு அதிகாரமுண்டு, ஆனால் சுவிஸ் வங்கி, மொனாக்கோ வங்கி போல எவ்வளவு பேர் அடைபட்டிருக்கின்றார்கள், எங்கு இருக்கின்றார்கள் என சொல்லமாட்டார்கள்


அதாவது யார் சிறையில் இருக்கின்றார், யார் வெளியில் இருக்கின்றார் என்பதே தெரியாது.


கட்சிக்காரன் சிறையில் இருக்கின்றான் என பத்திரிகையிலும் எழுதமுடியாது, காரணம் பத்திரிகை தணிக்கை இருந்தது.


ஆனால் கட்சி தலைவராக சிறையில் இருப்போர் பற்றி சொல்லியே தீரவேண்டிய கட்டாயம் கலைஞருக்கு இருந்தது.


மனிதர் யோசித்தார், ஒரு மலர் வளையம் வாங்கினார் கட்சி சார்பில் அண்ணாவிற்கு அஞ்சலி என அறிவித்தார், அந்த கூட்டத்தில் வாசித்தார்


"நம் இதய தெய்வமாம் அண்ணா அவர்களின் நினைவு நிகழ்ச்சிக்கு வராதவர்கள் பட்டியல்.." என பல பெயரினை வாசித்தார்


வாசித்து முடித்து சொன்னார், "மறுபடியும் சொல்கின்றேன் இவர்கள் எல்லாம் வரமுடியாதவர்கள்.."


புரியவேண்டியவர்களுக்கு புரிந்தது, அதாவது அரசு மறைத்த ரகசியம் வெளிவந்துவிட்டது,


சிறையில் இருப்பவன் எப்படி அண்ணா சமாதிக்கு வருவான்?


இந்த அண்ணா சமாதி செய்தியினை பத்திரிகைகளால் தடை செய்யவும் முடியவில்லை, இந்த நுட்பத்தினை அவர்கள் உணரவில்லை, ஏதோ அறிவிப்பு போல செய்துவிட்டார்கள்.


இப்படியாக தமிழகத்தில் மட்டும் உண்மை நிலையினை வெளிகொணர்ந்தார் கலைஞர்


இந்த 5ம் வகுப்பு கூட தாண்டாதவரின் நுட்பத்தினை கண்டு, தன் தோல்வியினை ஒப்புகொண்டு புன்னகைத்தார் இந்திரா, வெளிநாட்டில் படித்த இந்திரா.


சொல்லுங்கள், இப்படி ஒரு நுட்பமான அரசியல்வாதி இனி சாத்தியமா?


அந்த ரசனையே தவிர, கட்சி அபிமானம் எல்லாம் இல்லை






கொசுறு 1


"பெண்களின் உரிமை தொடர்பான பிரச்சினையை முஸ்லிம்–இந்து பிரச்சினையாக பேச வேண்டாம் என தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


இது முன்னேற்றத்துக்கான பிரச்சினை. இந்த விவாதம் மறுசீரமைப்பு வேண்டுவோர் மற்றும் வேண்டாதோர் அடங்கிய முஸ்லிம் அறிஞர்களுக்கு இடையே நடத்தப்பட வேண்டும்.


முஸ்லிம் பெண்களுக்கு அரசியல்சாசனத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளது" : பிரதமர் மோடி


வாழ்த்துக்கள் மோடி, மிக பொறுப்பான கோரிக்கை.








 கொசுறு 2


அனைத்து கட்சிகளிலிருந்தும் ஆட்களை சேர்த்துவிட்டு,அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது நயவஞ்சக நரித்தனம்.-வைகோ..

ஹஹஹஹா இவரே முன்னாள் திமுக நபர், தாய் கட்சிதானே அழைக்கின்றது சென்றால் என்ன?

சாதாரண பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே இவர் திமுகவில் இருந்ததால்தான் வர முடிந்தது, அதன் பின் இவரை எம்பி ஆக்கி கழகத்தின் போர்வாள் என ஆக்கி அடையாளமிட்டது அவர்கள்தான்.

திமுக என்றொரு கட்சி இல்லை என்றால் கோப்பால் சாமி ஒரு தோற்றுபோன வக்கீலாக எங்கோ அலைந்துகொண்டிருப்பார்.

இவர் கட்சி தொடங்கியது போலவும், திமுக அதனை உடைத்தது போலவும் பேசி கொண்டிருக்கின்றார்.

10 பேர் வெளிவந்தார்கள், 8 பேர் திரும்பி விட்டார்கள், ஒன்று அடிமை சாசனம் எழுதி இன்னொவாவில் சுற்றிகொண்டிருக்கின்றது

இவர் தனியாக நின்று துண்டை முறுக்கி சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்.

கோப்போலா..கோப்பாலா
மலையேறு கோப்பாலா..............




கொசுறு 3




தேர்தல் புறக்கணிப்பு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

உலகமே எதிர்பார்த்த விஷயத்தின் முடிவு இது,

எதற்கும் பங்குசந்தை முதலீடுகளை எல்லோரும் திரும்ப எடுத்துகொள்வது நல்லது, இப்பொழுது உலக சந்தை மூடபடும் பாருங்கள்.


சிரிய யுத்தம், உலக பொருளாதாரம் என பல பாதிப்புகளை ஏற்படுத்தபோகும் அறிவிப்பு வெளிவந்துவிட்டது

அமெரிக்க தேர்தல் களத்தில் இதன் பாதிப்பு நிச்சயம் தெரியும். அமெரிக்க டாலர் மதிப்பு எப்படி குறையும் என பாருங்கள்,

ஒபாமாவும் புட்டீனும் மிக அவசர சந்திப்பினை நடு கடலில் கூட நடத்தும் அளவிற்கு மிக நெருக்கடியான அறிவிப்பு...










மருதிருவருக்கு "வீர வணக்கம்"...



Image may contain: 1 person , sunglasses


தெற்கே நடந்த சுதந்திரபோரில் மருது சகோதரர்களின் போராட்டம் குறிப்பிடதக்க வீர போராட்டம்.


வேலுநாச்சியார் தளபதிகளாகவும், ஊமைதுரையின் நண்பர்களாகவும் மானமிக்க போராட்டத்தினை அவர்கள் நடத்தி வெள்ளையனுக்கு சவால் விட்டவர்கள்


மிக சிறந்த வீரர்கள், வெள்ளையனே சொன்னது போல "இவர்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டால் இந்த இந்தியாவினையே பிடிக்கலாமே, முடிந்தவரை நம்பக்கம் இழுக்க நினைப்போம்"





ஆனால் மானமிக்க அவர்கள் இறுதிவரை மண்டியிடவில்லை.

வரலாற்றின் ரகசிய பக்கங்கள் அதனை சொல்கின்றன,

வெள்ளையன் காட்டிய தந்திரங்களில் ஒன்று தளபதிகளுக்கு ஆசையூட்டுவது, அடுத்த நிலையில் இருப்பவர்களை வளைத்துபோட்டு மன்னை கொல்வோம், உன்னை மன்னராக்குவோம் என துரோக வெறியூட்டி காரியம் சாதிப்பது

திப்பு சுல்தான், வங்கத்து நவாப் என பல இடங்களில் அப்படித்தான் வெள்ளையர் சாதித்தனர்.

ஆனால் விசுவாசமிக்க மருது சகோதரர்களிடம் அது எடுபடவில்லை, ராஜ விசுவாசமும் நாட்டு பற்றும் அவர்களின் ரத்ததில் கலந்திருந்தது.

மானமிழந்து, ராஜதுரோகம் செய்து கிடப்பது அரசே ஆயினும் அதனை ஏற்பது அவமானம் என கருதிய பெரும் உத்தம குணம் அவர்களிடம் இருந்தது, அதனை விட போராடி சாவது மேல் என்ற மான உணர்வு இருந்தது.

வீரமுடன் யுத்தத்தினை எதிர்கொண்டனர்.

பெரிய மருது கொல்லபட்டான், இளைய மருது சிக்கவில்லை

அவன் அகப்படவில்லை என்றால், அவனால் வணங்கபட்ட காளையார் கோவிலை தகர்க்கபோவதாக பீரங்கிகொண்டு மிரட்டினர் வெள்ளையர்

ஆலயம் காக்க தானே சரணடைந்தான் சின்ன மருது. காளையார் கோவில் கோபுரம் எக்காரணம் கொண்டும் இடிக்கபட கூடாது என சத்தியம் வாங்கிகொண்டபின் மரணத்தை தழுவினான் அவன்.

இன்று அவர்களின் நினைவு நாள்.

காளையார் கோவில் கோபுரமும், அதன் மீது அவன் கொண்ட தீவிர பற்றும் நினைவுக்கு வருகின்றன‌

அக்கோபுரமும், இந்திய தேசியமும் வாழும் காலம்வரை மருது சகோதரர்களும் வாழ்வார்கள்

"தேசியமும் தெய்வீகமும் எமது கண்கள்.." என பசும்பொன் சிங்கம் முழங்கியதும் இந்த வீர வரலாற்றில் இருந்தேதான்

அந்த வார்த்தையினை இப்பொழுது சொல்லலாம், ஆழ்ந்த அர்த்தமுண்டு

மருதிருவருக்கு "வீர வணக்கம்"












சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது...

https://youtu.be/P0KAhpGPDZ4
                                                        சுஜாதா : கோபி நாத்  :: நேர்காணல் 





மலேசியாவில் சில தமிழறிஞர்களை கண்டிருக்கின்றேன், ஓலை சுவடி முதல் தமிழ் பண்டைய இலக்கியம் வரை வைத்திருப்பார்கள் பெரும்பால புத்தகம் கழக வெளியீடு, கழகம் என்றால் திராவிட கழகம் அல்ல, சைவ சித்தாந்த கழகம் போன்ற பழமையான தமிழக வெளியீடுகள்


அற்புதமான புத்தகங்களை கண்டிருக்கின்றேன், அதில் கம்பராமயணமும் உண்டு, அவர்கள் அதனைபற்றி பேச ஆரம்பித்தால் நெல்லை கண்ணனே கைகட்டி கேட்பார். அப்படி மிக சரளமாக சொல்வார்கள்.


உலகிற்கு தெரியாமல் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிவுபடைத்தவர்கள் அவர்கள், அவர்களின் இறுதிகாலங்களில் சந்தித்திருக்கின்றேன்


"இந்த புத்தகங்களை எல்லாம் கொண்டு செல்லுங்கள் அய்யா.. எமக்கு பின் என் வீட்டில் தமிழ்படிக்க யாருமில்லை.." என்றார்கள், சொல்லும்பொழுதே அவர்கள் கண்கள் கலங்கின.


பொருளாதார ஓட்டம் மிகுந்த உலகில் தமிழ் தோற்று கொண்டிருக்கின்றது, எதனால் உபயோகமில்லையோ அதனை தூக்கி எறிவது மனிதன் குணம், அப்படி உபயோமில்லா மொழி பல தமிழர்களின் வீடுகளிலிருந்து விடைபெற்று கொண்டிருக்கின்றது


நேற்று சுஜாதா ரங்கராஜன், அதாவது எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி பேட்டி இன்னும் திகிலூட்டியது


அவர் சொல்கிறார், அமெரிக்காவில் வாழும் என் பேரனுக்கு தமிழ்தெரியாது, ஜப்பானிய மொழியும் ஆங்கிலமும் தெரியும், அவனுக்காக நான் ஜப்பான் மொழி கற்றேன்


மனதில் வலித்த வலியினை சொல்ல வார்த்தை இல்லை


முன்பே கேட்ட செய்தி நினைவுக்கு வந்தது, பாரதியாரின் வாரிசுகள் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றன, இன்னும் ஓரிரு தலைமுறையில் தமிழ் அவர்களிடமிருந்து விடைபெறலாம்.


சுஜாதா எப்படிபட்ட தமிழறிஞர், தொன்மையான இலக்கியங்களில் அவருக்கு எப்படி ஆழ்ந்த அறிவு இருந்தது. ஆழ்வார்களின் பாடல்களுக்கு அவர் சொன்ன அற்புதமான விளக்கங்கள் எப்படி இருந்தன‌


அப்படி பட்ட சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது என்பது ஒவ்வொரு தமிழனுக்குமான, தமிழ் தெரிந்தவனுக்குமான வேதனை.


தமிழகத்தில் தமிழின் நிலை அப்படித்தான் இருக்கின்றது.


இந்தி தமிழை அழித்துவிடும் என்று சொல்லி போராட வைத்து 64 பேரினை கொன்று தடுத்தார்கள்


ஆனால் இந்தியினை வரவேற்ற ஆந்திராவில் தெலுங்கு அழியவில்லை, கேரளாவில் மலையாளம் அழியவில்லை, கன்னடத்தில் கன்னடம் அழியவில்லை


ஆனால் இந்தியினை தடுத்த தமிழகத்தில் தமிழ் அழிந்திருக்கின்றது, எப்படிபட்ட முரண்


காமராஜரும் பக்தவத்சலமும் தமிழை அழிக்கின்றார்கள் என சொல்லபட்ட காலத்தில் இருந்த அழகிய தமிழ் கழக ஆட்சிகளில் மிகவும் கெட்டுபோய் நிற்கின்றது


தமிழ் சொல்லுக்கும் தட்டுப்பாடு, கடைகள், நிலையங்கள் என தமிழை காணவில்லை


சந்தடி சாக்கில் புதிய தமிழ்சொற்களை உருவாக்குகின்றேன் என மனுஷ், ஜெயமோகன் இன்னும் பல இம்சைபிடித்தவர்களின் கற்பனையில் தொன்மம், படிமம், புரிதல், சொறிதல், ஆன்மம் என மிக கொடுமையான தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்கபட்டு அது அழிந்துகொண்டிருக்கின்றது


தமிழை நிச்சயம் காப்பாற்றலாம், அதற்கு தனிநாடு எனும் அவசியம் இல்லை. நமது தமிழ் எனும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் போதும்.


அரசும் சில கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், தமிழ் தானாய் வாழும்


வாழ வைப்போம், வாழட்டும்


திருமதி சுஜாதாவின் பேட்டி பல இடங்களில் திகைக்க வைத்தது, அவரின் எழுத்துக்களுக்காக அல்ல, மாறாக வாக்கு இயந்திரம் வடிவமைத்ததற்காக அவருக்கு பத்மஸிரி கொடுத்திருக்கலாம் எனும் அவரின் ஏக்கம் மனதினை தாக்குகின்றது


(ரஜினிக்கெல்லாம் பத்ம ஸிரி, பத்ம பூஷன் கொடுத்ததை நினைத்து தலையில் அடித்துகொள்ளலாம்)


சாகித்திய அகாடாமி கிடைக்காதது பற்றிய கேள்விகளுக்கு , மிக அழகான விஷயங்களை மறைமுகமாக சொல்கின்றார். சுஜாதாவின் எழுத்துக்கள் வேறு வகையானவை, அதற்கு சாகித்ய அகாடெமி எல்லாம் அளவுகோல் அல்ல‌


அவரின் வார்த்தைகள் சிலவற்றை சொல்கின்றன, சுஜாதா பணத்திற்காக எழுதியவர் அல்ல, அதனை கணக்கு பார்த்தவரும் அல்ல. புகழுக்காகவோ பணத்திற்காகவோ எழுத்தினை தொடங்கியவர் அல்ல‌


தன் மனதில் ஊறியவற்றை எழுதியிருக்கின்றார், கேட்டவருக்கெல்லாம் எழுதி கொடுத்திருக்கின்றார், பலர் அவரை வைத்து சம்பாதித்திருக்கின்றனர், எந்திரன் படத்திற்கு கூட அவர் கதை ஒப்பந்தம் எழுதவில்லை என்கின்றார்


அவரது ஆப்பரேஷனுக்கு கமலஹாசன் மட்டும் உதவி இருக்கின்றார் என்பதுதான் கண்ணீரை கொட்டுகின்றது, எத்தனை ஆயிரம் பேரினை வசீகரித்த எழுத்தாளர், எத்தனை கோடிகளை கொட்டும் சினிமாவிற்கு எழுதியவர், அவருக்கு உதவியர் எனும் பெயரில் கமலஹாசன் பெயர் மட்டும் வருகின்றது


"கற்றோரை கற்றோரே காமுறுவர்.."


பெரும் எழுத்தாளர் கல்கி ஒருமுறை சொன்னார். "எழுத்து என் தொழில், ஆனால் சோற்றுக்கு இன்னொரு தொழில் தேடிகொள்ளும் நிலையில் இருக்கின்றேன்"


தமிழக எழுத்தாளர் நிலை அன்றும் அப்படி, சுஜாதா காலத்திலும் அப்படி. எழுதி சம்பாதிக்கமுடியா தமிழகம் இது.


சினிமாவில் கூட நடிகனுக்கு இருக்கும் வரவேற்பு அவனுக்காக மாய்ந்து எழுதும் எழுத்தாளனுக்கு இருக்காது.


அவ்வளவு ஏன் யூத வரலாற்றினை மிக அற்புதமாக தமிழில் கொண்டுவந்தார் Pa Raghavan. உண்மையில் கிறிஸ்தவ சபைகள் கொண்டாட வேண்டிய நூல் அது, நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் உருவாக்க அவர் பட்டிருக்கும் பாட்டினை நினைத்தாலே புல்லரிக்கின்றது.


நிச்சயம் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரோ அல்லது கடவுளே இஸ்ரேலுக்காக வேண்டுகின்றோம் என கதறும் கிறிஸ்தவனோ, பழைய ஏற்பாட்டின் வசனங்களை நெற்றியில் தவிர கார், பைக், வீட்டு வாசல், டாய்லெட் சுவர் என எங்கும் எழுதி இம்சை செய்யும் கிறிஸ்தவன் செய்ய வேண்டிய வேலை அது


காரணம் பழைய ஏற்பாடு சொல்லவேண்டிய எத்தனையோ நிகழ்வுகளை அவர் சொன்னார்.இயேசு கிறிஸ்துவிற்கும் அதன்பின் இஸ்ரேல் அமைந்த 1948க்கும் இடைபட்ட அந்த யூத காலங்களை எங்கு படிப்பீர்கள்? கிறிஸ்தவ பாதிரிக்கு தெரியாது


இஸ்ரேலின் கடவுள் என மூச்சுக்கு முன்னூறு முறை கத்த்தும் கிறிஸ்தவர்களுக்கு அந்த கடவுளின் ஜனங்கள் 2000 வருடமாக எங்கிருந்தார்கள் என்பது தெரியாது


ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறுகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும் அல்லவா?


Pa Raghavan அவர்களுக்கு இந்த கிறிஸ்தவ சமூகம் செய்தது என்ன?


(கிறிஸ்தவ ஆயர்களும், இயேசுவிற்காக வாழ்பவர்கள் என சொல்பவர்களும் கலைஞரைத்தான் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள், இப்பொழுது மோடிக்கு


சொத்துக்களை காக்கவேண்டும் அல்லவா?)


இதுதான் தமிழகம், படித்துவிட்டு " ஓ...ஓ அப்படியா??.. என இலைக்குமுன்னால் அமர்ந்து "சோற்றை போடு..." என சொல்லும் சமூகம்


போகட்டும், இங்கு அப்படித்தான்


சுஜாதா தன் ஆன்மாவில் இருந்து எழுதியிருக்கின்றார், பணம் கொட்டியிருந்தால் கூட 3 தலைமுறையில் தீர்ந்திருக்கும். ஆனால் அவரின் எழுத்த்து எத்தனை தலைமுறை கடந்தும் நிற்கும்.


அந்த அழியா சொத்தினைத்தான் அவர் உருவாக்கி வைத்திருக்கின்றார்.


உலகமே தெரியாமல் வளர்ந்ததாக, வாழ்ந்ததாக சொல்லும் திருமதி சுஜாதா, நிச்சயம் பெரும் அறிவாளி. சுஜாதாவினை புரிந்திருக்கின்றார், அவருக்காக வாழ்ந்திருக்கின்றார்.


அப்படிபட்ட மனைவி கிடைத்ததால்தான் 40 வயதிலே நோயாளியான சுஜாதாவின் எழுத்து 75 வயது வரை தொடர்ந்திருக்கின்றது.


அவரின் பேட்டியினை கண்டால் தேர்ந்த அனுபவ அறிவு வெளிப்படுகின்றது, தெரியாது தெரியாது என சொல்லியே எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது தெரிகின்றது.


அவரின் ஒரு வரி கொஞ்சம் நெருடல் "வரம் பெற்றவர்களோடு வாழ்வது சிரமான காரியம்"


அதேதான் பாரதியாரின் செல்லம்மாள் சொன்ன அதே வார்த்தைகள்.


காரணம் எழுத்தாளன் என்பவன் பெரும்பாலும் சிந்தனையில் வாழ்வான், அவனுக்கான உலகம் தனி. சிந்திப்பதை உடனே எழுதியாக வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டால் அது போய்விடும்


திருமதி சுஜாதாவின் வார்த்தைகளும் அதனையே சொல்கின்றன.


சிந்தனை மிக்க எழுத்தாளனின் மனைவியாக வாழ்வது பெரும் கொடுமை,


(ஆனால் கலைஞர் போன்ற விசித்திர எழுத்தாளர்களால் அதனை கடந்துசெல்ல முடியும், மூன்று குடும்பத்தினை அழகாக தாங்கி இருக்கின்றார்.


இவர் மனிதரா இல்லை ஏதும் அவதாரமா? அஞ்சுகம் அம்மையார் எங்காவது கண்டெடுத்த ஏலியன்ஸா என்பது இன்றுவரை விளங்கவில்லை)


அவர் தன் மனைவிக்கு பெரிதாக செய்துவிடவில்லை என்ற எண்ணம் அவரிடம் இறுதிநாட்களில் இருந்திருக்கலாம், பெரும் அறிவாளியான சுஜாதாவின் கடைசி வார்த்தைகள் அதனைத்தான் சொல்கின்றன‌


எப்படி ஆயினும் எந்த எழுத்தாளனும், ஏன் மனைவிக்கு பெரும் நன்றிகடன் பட்ட மார்க்ஸ் கூட செய்யாத பிரதிபலனை எழுத்தாளரான சுஜாதா தன் மனைவிக்கு செய்திருக்கின்றார்


ஆம் அந்த திருவரங்க ரங்கராஜன் தன் எழுத்துக்களை எல்லாம் சுஜாதா எனும் பெயரிலேதான் எழுதியிருக்கின்றார்


அந்த பெயர்தான் காலத்தில் நிலைத்துவிட்டது.


தன் மனைவி தனக்காக படும் சிரமங்களை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்து தன் பெயரினை நீக்கி மனைவி பெயரினை இட்டுகொண்டார்.


அவர் உயிராய் நினைத்து, ஆன்மாவில் இருந்து எழுதிய எழுத்துக்களோடு தன் மனைவியின் பெயரினையும் இணைத்து நன்றிகடன் செய்துகொண்டார்


இதனை விட தன் மனைவி மீதான அன்பினை அவர் எப்படி வெளிகாட்ட முடியும்.


வற்றிவிட்ட ஒரு பெரும் நதியின் கரை, அந்நதியினை பற்றி பேசுவது போல இருந்தது திருமதி சுஜாதாவின் அனுபவமான பேட்டி







இதுதான் உலக அரசியல் மர்மம், ஒன்றில் தொடங்கி ஒன்றில் முடியும்

ஈழ தமிழர்களுக்கும், ஈழ போராட்டத்திற்கும் கலைஞர் துரோகம் செய்தார் என பலர் புலம்புகின்றனர், கலைஞர் பற்றி எழுதினாலே அவர் ஈழதுரோகி என சொல்லிகொண்டே இருக்கின்றனர்.


அவர் தொடக்க காலத்தில் ஈழபோராட்டத்தை ஆதரித்த விதம் குறித்தும், அமைதிபடை அனுப்பும்பொழுதே, அதாவது புர்ச்சி தலைவர் அமைதியாக கம் மென்ன்று இருந்த காலத்திலே அதனை எதிர்த்தவர் கலைஞர்.


பின்னாளில் புலிகள் பத்மநாபா, ராஜிவ் கொலை என திசைமாறி செல்ல அமைதியானார் கலைஞர், 2009 இறுதியுத்தத்தினை கலைஞர் அல்ல, மன்மோகன் சிங் நினைத்தாலும் தடுத்திருக்கமுடியாது. அதனை நடத்தியது பெரும் கைகள்.


சரி இப்பொழுது உண்மையில் ஈழம் அமைய வாய்பிருந்தபொழுது துரோகம் செய்தது யார் என பார்க்கலாம்


அதாகபட்டது ராஜிவ் கொலைக்கு பின் இந்தியா ஒதுங்க இடம்பார்த்து அடித்தார் சந்திரிகா, யாழ்பாணத்தினை விட்டு ஓடி வன்னியில் பதுங்கினர் புலிகள். அது புலிகளுக்கு பெரும் அடி, காரணம் யாழ் என்பது பணக்கார பூமி, வசூலில் அள்ளலாம் இன்னொன்று ஈழ தமிழரின் இதயம் அது.


அப்படி வன்னிபகுதியில் அடைபட்டு திகைத்து நின்ற புலிகளுக்கு வாய்ப்பு வேறு உருவில் வந்தது.


அது இந்திய அணுகுண்டு வெடிப்பு, வாஜ்பாய் அணுகுண்டினை வெடித்து வெற்றி வெற்றி என முழங்கவும் எங்கோ யாருக்கோ வலித்தது, விட கூடாது இனி இந்தியா நிம்மதியாக இருக்கவே கூடாது, ம்ம்ம்ம் அதன் எதிரிகளை எல்லாம் உசுப்புங்கள்


உடனே பாகிஸ்தான் அணுகுண்டு வெடிக்கின்றது, இந்தியாவின் நண்பனான நேபாளத்தில் நிலை மாறுகின்றது, தெற்கே இலங்கையில் புலிகள் புதுபலம் பெறுகின்றனர், நவீன ராக்கெட் லாஞ்சர்கள் அதாவது சிங்களனிடம் இல்லா ஆயுதங்கள் கிடைக்கின்றன.


இதுதான் உலக அரசியல் மர்மம், ஒன்றில் தொடங்கி ஒன்றில் முடியும்


ஆயுதம் நொறுக்கிய புலிகள், தங்கள் போராட்டத்தின் மிகபெரும் வெற்றியான யானை இறவு முகாமினை முடக்குகின்றார்கள். சிங்களம் செயல் இழந்து நிற்கின்றது


புலிகள் வரலாற்றில் அது பெரும் வெற்றி, ஒப்புகொண்டே ஆகவேண்டும் மாபெரும் வெற்றி


அதோடு யாழ்பாணம் துண்டிக்கபடுகின்றது, இனி அங்கிருக்கும் சிங்கள வீரர்களை நொடியில் விரட்டி யாழ்பாணத்தை கைபற்ற புலிகளுக்கு மிக குறைந்த நேரமே ஆகியிருக்கும்


அப்படி கைபற்றிவிட்டால் ஈழ பிரகடனம் செய்துவிடலாம், வன்னியிலே தனி ஈழ அறிவிப்பு செய்திருக்கலாம், ஆனால் யாழ்பாணம் இல்லா ஈழம் அமைவதை யாரும் விரும்பதில்லை


அப்போரில் கிட்டதட்ட 50,000 சிங்கள வீரர்கள் சாகும் நிலை இருந்தது, புலிகள் வளைத்திருந்தார்கள். குடிநீரை கூட தடை செய்திருந்தார்கள். சிங்களம் கதறி அழுதுகொண்டிருந்தது.


இன்னும் சிலமணி நேரங்களில் ஈழ பிரகடனம் பிரபாகரன் செய்வார் எனும் நிலை,


"உன் காலடியில் ஒரு சிறிய நாடு, அதிலொரு சிறிய குழு உன்னை மீறி, உன் ராணுவத்தை விரட்டி, உன் பிரதமரை கொன்று தனிநாடு அமைக்க போகின்றது


ஹிஹிஹிஹி உனக்கெல்லாம் அணுகுண்டா? " என பல நாடுகள் இந்தியாவினை நோக்கி சிரிக்க காத்திருந்த நேரம்.


இந்நேரத்தில்தான் இந்தியாவிடம் மறைமுகமாக உதவி கோரியது சிங்களம், வாஜ்பாய் இந்திய பிரதமர்.


சிங்கள வீரர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டும், யாழ்பாணத்தை புலிகள் மீட்க கூடாது எனும் நோக்கிலும் சில செய்திகளை சொல்லி எச்சரிக்கை செய்தது இந்தியா, இல்லாவிட்டால் இந்திய கப்பல்கள் அவர்களை மீட்கும் என மிரட்டியது


வேறுவழி இல்லா புலிகள் கண்ணீரோடு வழிக்கு வந்தனர், சிங்கள வீரர்களை விடுவித்து, யாழ்பாணம் நோக்கிய முன்னேற்றத்தையும் நிறுத்தினர்.


அன்று அந்த 25 வருட போராட்டம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தபொழுது, அதனை இந்திய தலையீடு தடுத்தபொழுது, வாஜ்பாய் அரசில் பங்குபெற்றிருந்தவர் யார்?


சாட்சாத் வை.கோப்பால் சாமி


ஒரு சத்தம் இல்லை, ஒரு ஒப்பாரி இல்லை ஒன்றுமே இல்லை, மகா அமைதி. இவரின் கட்சிக்காரர்கள் அன்று மத்திய அமைச்சர்கள்


அன்றெல்லாம் ஈழவிரோத பிஜேபி, தமிழர் விரோத மத்திய அரசு என்றெல்லாம் சத்தமே இல்லை


இந்த சீமான் அன்று பாரதி ராஜா முன்னால் இருந்து கிளாப் அடித்துகொண்டிருந்தார்,


இன்று அவரிடம் கேளுங்கள் அப்படி 40 ஆயிரம் சிங்களர்கள் எப்படி தப்பினார்கள் என்று


"என் அண்ணனின் இரக்கம் அப்படி" என சிரிக்காமல் கூசாமல் பொய் சொல்வார்.


இறுதியுத்த ஒப்பாரி பிரபாகரன் உயிரை காக்க எழுப்பபட்டது, ஆனால் வாஜ்பாய் காலத்தில் ஈழம் அமையும் சாத்தியம் அருகில் இருந்தும் செய்யபட்டதுதான் பெரும் துரோகம்


அந்த மந்திரிசபையில் அசையாமல் இருந்தவர் எல்லாம் இன்று கலைஞரை தூற்றிகொண்டிருக்கின்றார், எல்லாம் கால கோலம்.

Monday, October 24, 2016

பகுத்தறிவு எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

திராவிடம் பற்றி என்ன குறைகண்டாய், பகுத்தறிவு எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா


பெரியாரும் நாங்களும் (இவருமாம் :) ) போராடவிட்டால் நாடு எவ்வளவு மோசமாயிருக்கும் தெரியுமா? எங்கள் போராட்டத்தால்தான் கல்வி, பெண்விடுதலை, இன்னபிற விஷயங்கள் சாத்தியமாயிற்று என ஒருவன் வந்து சொல்லிகொண்டே இருக்கின்றான்


அதாவது இந்துமதம் ஒரு கொடூரமான மதமாகவும், திராவிட கொள்கைகளே மிக சிறந்தது என ஒப்புகொண்டு எழுதவேண்டுமாம், ஆலோசனை சொல்கின்றாராம்.


தீபாவளி இந்துக்களின் புரட்டு, பிராமணர்களின் அட்டகாச பொய் என எழுதவேண்டுமாம், அப்படியே திராவிட பகுத்தறிவு கொள்கைகளை விளக்கவும் வேண்டுமாம்.


நண்பரே


மதம் என்பது மக்களின் ஆதார நம்பிக்கை, அதனை தகர்க்கும் விதமாகவோ அல்லது புண்படுத்தும் விதமாகவோ கருத்துக்களை சொல்லிவிடமுடியாது.


நாத்திகம் நீங்கள் ஏற்றுகொண்ட பாதையாக இருக்கலாம், உங்களுக்கு பிடித்தமான கொள்கையாக இருக்கலாம், நல்லது, ஆனால் நாத்திகம் உலகினை மாற்றியது என்பதையோ அல்லது அது பலமாற்றங்களை ஏற்படுத்திற்று என்பதோ ஒப்புகொள்ளகூடிய கருத்து அல்ல.


நரபலி என்பது ஆதிகால பழக்கம், சிவன் பிள்ளைகறி கேட்டது புராணம் என்றாலும் கூட, பைபிளில் ஆபிரகாமிடம் கடவுள் கேட்டது நரபலி,அதாவது அக்காலத்தில் உலகெல்லாம் இருந்த பலி.
அதனை எந்த நாத்திகமும் மாற்றவில்லை, ஆனால் காலம் மாற மாற மாறிற்று, ( இன்னும் ரகசியமாக இருக்கின்றதா? என்றால் கிரானைட் குவாரிகளில்தான் கேட்கவேண்டும்)


அடிமை முறை என உலகெல்லாம் இருந்ததே மகா கொடுமையான முறை அதனை சட்டமிட்டு தடுத்த லிங்கன் என்ன நாத்திகவாதியா? அவர் கட்சி என்ன கருப்புசட்டையா?


பெண் அடிமை என்பது இந்துமதத்தில் மட்டுமல்ல, மதங்களின் தாயான யூதமதம் அதனை கடுமையாக சொல்லிற்று, அதன் வழிதோன்றலான இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதனையே தொடர்ந்தன. கட்டுபாடான இஸ்லாம் அதனை இன்னமும் பின்பற்றுகின்றது. கிறிஸ்தவம் ஐரோப்பிய கலப்பலிலும் பெண்ணடிமைதனத்தை போதித்தது.


பின்னாளில் போப்பின் ஆதிக்கம் முடிய, தொழில்புரட்சி ஏற்பட, பணியாளர் பற்றாக்குறை வந்தபொழுதுதான் பெண்கள் வேலைக்கே அனுப்பபடனர், வாக்களளிக்கும் உரிமை கூட நெடுநாள் இல்லை, ஐரோப்பா வாய் கிழிய பேசும் பெண்ணுரிமை வரலாறு இதுதான்.


இன்னமும் பெண்கள் கிறிஸ்தவ போதனைக்கு அனுமதிக்கபடுவதில்லை, பைபிள் போட்ட கடிவாளம் அப்படி, இவை எல்லாம் பெண் அடிமைத்தனம் இல்லையா?


இப்படி எல்லா மதமும் பெண்களை அடிமைபடுத்தியே வைத்திருக்கும் பொழுது, இந்துமதம் மட்டும் அடிமை படுத்தியதாகவும் அதனை நாத்திகம் மாற்றியதாகவும் நீங்கள் சொல்வது நிச்சயம் ஒரிஜினல் நாத்திகமாகாது.


தேவதாசிமுறை இந்து மதத்தில் மட்டும் உள்ளதல்ல, முற்கால சமூகம் பெண்களுக்கு அளித்திருந்த சுதந்திரம் அப்படி. அக்கால திபெத்திய பெண்கள் அவர்கள் தனிமையில் சந்திக்கும் ஆண்களிடம் பெறும் வளையமே அவர்கள் மதிப்பு, யார் அதிக வளையம் வைத்திருக்கின்றாகளோ அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் கூட்டம் அலைமோதும்.


ஒரு பெண்ணிடம் நெருங்க ஒரு வெள்ளாட்டு குட்டி என்பது மேற்காசிய வழக்கம்(பைபிளில் கூட உண்டு), அப்படி பெரும் மந்தை சேர்த்தவளின் சுயம்வரமே அன்று பெரும் ஒலிம்பிக் போட்டி.


பிற்கால எழுச்சிகளில் மற்ற இடங்களில் அவை ஒழிக்கபட்டாலும், முற்கால உலகின் தொடர்ச்சியான இந்தியாவில் அது தொடர்ந்து,
பின் இது நிச்சயமாக‌ இந்துக்களின் தேவதாசிமுறை என அறியபட்டு பழி இந்துமதம் மீது திணிக்கபட்டது.


பெண் ஒரு ஆணின் சொத்து என மதங்களும், மனுதர்மமும் மாற்றிய பின்புதான் உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது.


அதனையும் இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் எனும் பிராமண ஆத்திக சீர்திருத்தவாதி மாற்றினாரே அன்றி ஒரு நாத்திகன் அல்ல.


கம்யூனிசம் ரஷ்யாவில் வென்றபின்பே, இந்தியாவில் நாத்திகவாதம் ஓங்கி ஒலித்தது, அது பின் பரவியது. கடவுள் நம்ப்பிக்கையோடு கூடிய கம்யூனிசம் மட்டும் அமைந்திருக்குமென்றால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்ய ஒன்றியம் அசைந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது.


தம்மை அடக்குபவர்கள் ரஷ்ய திருச்சபை என மக்கள் நம்பியதன் விளைவு ரஷ்யபுரட்சி, அங்கு இன்று நிலை தலைகீழ். பிராமணர்கள் நம்மை எல்லாம் சுரண்டுகின்றார்கள் என நம்பவைக்கபட்டதன் விளைவு தமிழக எழுச்சி.


இந்தியாவில் எத்தனை அரசர்கள், எத்தனை நிலசுவாந்தார்கள் அல்லது ஜமீன்கள் உண்டு. இதில் ஒரு பிராமண அரசன் அல்லது ஜமீன் என காட்டமுடியுமா?, நமது நோக்கம் அது அல்ல விட்டுவிடலாம்.


ஆனால் மதம் என்பது மக்களின் அடிப்படை நம்பிக்கை ஆதாரம், கடவுளை தாங்கள் விரும்பிய வடிவில் வணங்கி கொண்டாடிவிட்டு போகின்றார்கள், ஆனால் ஊர்வலம் எனும்பெயரில் ஏற்படும் சச்சரவுகள் தேவையற்றவை.


கடல் ஒன்றே, மனிதன் இட்ட பெயர்கள் பல. மேகம் ஒன்றே அது பெய்யும் இடங்கள் வேறு. கடவுள் ஒருவரே அதனை மனிதன் வணங்கும் பெயர்கள் பல.


அப்படியே இந்துமதம் கடவுளுக்கு பல உருவத்தினை படைத்து, சில தத்துவங்களை சொல்லி இச்சமூகம் கட்டுப்பாடோடு வாழ சில வகைகளை அக்கால சமூகம் வகுத்திருக்கின்றது, அதனை அவர்கள் பின்பற்றுகின்றார்கள்.


உதாரணம் பிள்ளையார், பிள்ளையாரை கடவுளாக கூட பார்க்கவேண்டாம், அதிலுள்ள தத்துவங்களை காணலாம் அல்லவா?


தாயினை போல் மனைவி அமையவே மாட்டாள், கிடைத்தவளுடன் மகிழ்வாய் இரு எனும் தத்துவமும். சாணியும் அருகம்புல்லும் பெரும் கிருமிநாசினி என சொன்ன தத்துவமும்,


மாக்கொழுக்கட்டையும், வாழைபழம் உடலுக்கு நல்லது எனும் ஆரோக்கியமும் அதில் அடங்கி இருப்பதை மறுக்கமுடியுமா?


தீண்டாமை என்பது யூதமத்தில் உண்டு, தீண்டாமையின் தொடக்கம் அம்மதமே, அதனை கண்டித்த புனிதமான இயேசுவினையே தீர்த்துகட்டிய மதம் அது,


அரேபியரிடமும் அப்படியான பாகுபாடு இருந்தது, நபிகள் நாயகம் அதனை நீக்கத்தான் பாடுபட்டார்.


அதே நேரம் கட்டுபாடு இல்லா மதம் வாழமுடியாது, ஒரு கண்ணுக்கு தெரியாத உயிரினை கூட கொல்லகூடாது என கொள்கையுள்ள மதம் அதாவது மகா கட்டுபாடுள்ள மதம் வாழமுடியாது, புத்தம் அப்படித்தான் சுருங்கிற்று.


எல்லா மதத்திலும் சிற்சில குறைபாடுகள் உண்டு.


ஆனால் இந்துமதம் எத்தனையோ இடர்பாடுகளை கடந்தும் வாழ்கிறதென்றால் அதன் காரணம் அது அனுமதித்திருக்கும் சுதந்திரம். பெருமாள் கோயில் இல்லையா, குளத்துக்கரை சாஸ்தா போதும், அதுவும் இல்லையா ஒரு கல்லும் சூடமும் போதும் தெய்வம் வந்துவிடும்.


இந்த சூட்சுமத்தில்தான் காலம் காலமாக அது தொடர்ந்து வருகின்றது, அதாவது ஒரு சக்தி இல்லாத மதம் இக்காலம் வரை தொடரமுடியாது. சரக்கில்லா கடைவாசலில் ஒரு ஆள் நிற்பார்களா?


ஆயிரமாயிரம் வருடங்கள் கழித்தும் நிலைத்து நிற்பவை இம்மதங்களா? அல்லது பிறந்து வெறும் 90 வருடங்களுக்குள்ளாக மெல்ல செத்துகொண்டிருக்கும் நாத்திகவாதமா?


இந்து மதம் அவர்களின் மதம், அதனை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் அல்லது விட்டு ஒதுங்கிவிடலாம்.


அதனை விட்டுவிட்டு அவர்கள் கொண்டாடிகொண்டிருக்கும் பொழுது, நாத்திக வாதம் பேசுவது எப்படியானது?


எனது தாய் அன்பானவள் என்றால் அது எனக்கு. அதற்காக அடுத்தவன் வீட்டுதாய் காட்டுமிராண்டி என சொன்னால் அவன் மனது எப்பாடுபடும்?


அவனவனின் தாய் அவனுக்கு தெய்வமல்லவா? மதங்களும் அப்படியானவை.


இவ்வுலகம் முழுக்க பல கொடுமைகளும், சிக்கல்களும் இருந்தன. கல்வி மறுப்பு, பெண் அடிமை, தீண்டாமை என சிக்கல் எல்லா நாட்டிலும் மதங்களிலும் இருந்தன‌


காலம் மாற மாற இவை எல்லாம் மாறிற்றே தவிர, இவற்றில் நாத்திகம் சாதித்தது என்ன?


அப்படி மாற்ற நினைத்தவர்களில், மாற்றி காட்டியவர்களில் மத நம்பிக்கை கொண்டவர்களே இருந்தார்களே அன்றி நாத்திக வாதிகள் அல்ல.


நாத்திகத்தின் ஆயுள் 1915களில் தொடங்கி 1990களில் முடிந்துவிட்டது.


இன்னும் நாத்திகம், பகுத்தறிவு, பார்ப்பானியம் என ஏதாவது சொல்லிகொண்டிருந்தால் உங்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை.


உலகில் நடந்தது காலமாற்றம், அது தமிழகத்திலும் நடந்தது அவ்வளவுதான்,


இதில் பகுத்தறிவு இயக்கம் சாதித்தது என்பது குருவி அமர பனம்பழம் விழுந்த கதையே அன்றி வேறல்ல..

இந்திய அரசும், ஐ.நாவும் நீதிவழங்கவேண்டும் : சீமான் சீற்றம்

யாழ்பாணத்தில் இலங்கை காவல்துறையினரால் கொல்லபட்ட தமிழ் மாணவர்களுக்கு இந்திய அரசும், ஐ.நாவும் நீதிவழங்கவேண்டும் : சீமான் சீற்றம்


சமீபத்திய யாழ்பாணம் செய்திகள் படித்தவர்களுக்கு சில விஷயம் புரியும், அதாவது சட்டம் ஒழுங்கு அறவே இல்லை, வாள் வெட்டு, கஞ்சா போதை, கோஷ்டி மோதல் என அது சீர்கெட்டு கிடக்கின்றது.


ஒரு காலத்தில் படிப்பிற்கோர் யாழ்பாணம் என்றிருந்த நிலைமாறி ஒரு விபரீத நிலைக்கு கொலை,கொள்ளை என அது வாழமுடியா நகரமாகிகொண்டிருக்கின்றது




சிங்கள அரசும் தயங்கி தயங்கி நடவடிக்கை எடுக்கின்றது, அதிரடியாக எடுத்தால் தமிழின அடக்குமுறை பாரீர் என பொங்கிவிடுவார்கள் எனும் ஒரு அச்சம்.


வெளிநாட்டு பணங்கள் வெள்ளமென பாய்வதும் இதற்கொரு காரணம், அதாவது போதைபொருள் பாவனை, கட்ட பஞ்சாயத்து போன்றவைகளுக்கு.


இம்மாணவர்கள் 50 பேர் நள்ளிரவில் பயணித்திருக்கின்றார்கள், சோதனைக்காக காவல்துறை தடுத்திருக்கின்றது, இவர்கள் நிற்காமல் சென்றதில் சிக்கல் தொடங்கியதில் சிக்கல் தொடங்கிற்று


ஏதும் பெரும் குற்றவாளிகள் என நினைத்துவிரட்டிய காவல்துறை ஒரு கட்டத்தில் சுட்டிருக்கின்றது, இருவர் பலியாகி 3 பேர் தப்பி இருக்கின்றார்கள்


சோதனையில் நிற்காமல் சென்றது ஏன் என்பதுதான் மர்மம், அதுவும் நள்ளிரவு


விஷயம் பெரிதாக சம்பந்தபட்ட காவலர்களை பணி நீக்கம் செய்து, கொலைவழக்கும் பதிவுசெய்துவிட்டார்கள், அதாவது நமது நாட்டில் நடப்பதை விட வேகமாகத்தான் செய்திருக்கின்றார்கள்


இதில்தான் சீமானும் வைகோவும் பொங்கி கொண்டிருக்கின்றார்கள்,


சூழ்நிலையினையும் , நடந்த கதையினையும், அங்கு எடுக்கபட்ட நடவடிக்கைகளையும் சொல்லமாட்டார்கள், மறைத்துவிடுவார்கள்


ஆனால் கடுமையாக கொந்தளித்து பேசிக்கொண்டிருப்பார்கள்


நள்ளிரவில் ஏன் சென்றார்கள், காவல்துறை செக்போஸ்டில் ஏன் நிற்கவில்லை என இவர்களிடம் கேட்டால் நாமும் தமிழின துரோகிகள்.


தமிழ்நாட்டில் எத்தனையோ தமிழர்கள் என்கவுண்டரில் கொல்லபட்டதுண்டு, அது ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து துப்பாக்கி சூடு, வெங்கடேச பண்ணையார் மீதான துப்பாக்கி சூடு என ஏராளம் உண்டு.


வெங்கடேசன் மீதான படுகொலைக்கு அமைக்கபட்ட விசாரணை கமிஷன் முடிவு கூட இன்னும் தெரியாது


அதுபோல சில லாக் அப் மரணமும், சர்ச்சைகுரிய துப்பாக்கி சூடுகளும் தமிழகத்தில் நடப்பதுண்டு. வாச்சாத்தி சம்பவம் போல சில பாலியல் சர்ச்சைகள் காவல்துறை மீதும் உண்டு.


சரி இவர் அந்த சிவகாசி ஜெயலட்சுமிக்காகவாது காவல்துறையினை கண்டித்த்து தலைகீழாக நின்றதுண்டா???


ராம்குமார் சிறையில் தற்கொலை செய்ததற்கு கூட பெரும் சர்ச்சைகள் உண்டு


அதில் தலையிட இந்த இந்திய அரசினையும், ஐ.நா பெருமன்றத்தையும் சீமான் கேட்கமாட்டாராம், யாழ்பாணத்தில் நடந்தால் உடனே இந்தியா தலையிட்டு தீரவேண்டும் என்பாராம்


இவர் அடிக்கடி சொல்வது போல நல்ல ................. பிறந்திருந்திருந்தால், தமிழக காவல்துறை மீதான சர்ச்சை பக்கங்களுக்கு ஐ.நாவிடமோ மத்திய அரசிடமோ அட குறைந்தபட்சம் மாநில முதல்வரிடமோ சொல்லட்டும் பார்க்கலாம்.