வைகோவின் இமேஜ் போல கச்சா எண்ணெய் விலை சரிந்து கிடந்தாலும் மானியங்களை குறைப்பது, எரிபொருள் விலையினை குறைக்காதது என சர்ச்சைகள் ஒருபுறம்.
ரிசர்வ் வங்கி கவர்ணருடன் பனிப்போர் இன்னொருபுறம்.
உலகெல்லாம் சுற்றிவிட்டு, பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீடு என சொல்ல அவசியமே இல்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டு சொன்னால் உலகமே ஓடிவந்திருக்கும் என தெரிந்தும் வெட்டியாக ஊர் சுற்றியது ஒருபுறம்.
பராகாசுர அணுவுலை நாடுகளை தேடிசென்று அழைக்க என்ன இருக்கின்றது, கதவை திறந்தால் வாசலில் நிற்கபோகின்றார்கள், இதற்கு ஏன் உலகம் சுற்றவேண்டும்.
வங்கி அலுவலர்களே வசதியானவன் வீட்டிற்கு வந்து தவம் கிடக்கும் காலமிது, அணுவுலை வியாபாரிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் நாட்டிற்கு சென்றுதான் அழைக்கவேண்டுமா? எல்லாம் சுத்த ஹம்பக்.
பஞ்சாயத்து அமைப்புக்களை ஒழிக்கும் முயற்சியும், நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்தான பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி என பல செய்யகூடாத செயல்களில் இந்த அரசு இறங்குவது நல்லதல்ல
யோகா, சமஸ்கிருதம், ஆலயங்களில் ஆகம விதி , சபரிமலை பாரம்பரியம் தொடரும் என சொல்லிவிட்டு பொதுசிவில் சட்டம் என்றால் அது ஏற்றுகொள்ள கூடியதா? நகைப்புகுரியது இல்லையா?
உள்ளாட்சி மன்றங்களை முறிக்கும் அவசியம் என்ன? அப்படி என்ன நடந்துவிட்டது? சொல்ல தெரியாது.
மோடி திறமையானவரார் என நம்பவைக்கபடலாம், ஆனால் ஒரே ஒரு திறமையான மனிதன் மட்டும் இருந்தால் ஒன்றும் ஆகாது, சமீபத்திய மெஸ்ஸி பெரும் உதாரணம், நல்ல வீரர்தான் ஆனால் அவர் மட்டும் கோல் அடிக்க முடியாதல்லவா, உப வீரர்கள் மகா முக்கியம்.
அப்படி மோடி ஏதோ செய்தாலும், அவரை தவிர அவரின் அமைச்சரவையில் சொல்லிகொள்ளும் நபர்கள் அருண் ஜெட்லி தவிர சொல்லிக்கொள்ள யாருமில்லை, அவரும் பல நேரம் வருணன், லட்சுமி, குபேரன் என்றுதான் புலம்புகின்றார். கல்வி அமைச்சரின் சில ட்வீட்டர் ஸ்டேட்மென்டுகள் குபீர் ரகம்.
ஒரு அமைச்சர்களும் , கட்சி பிரமுகர்களும் சொல்லிகொள்ளும்படி இல்லாமல் மோடி எனும் பிம்பத்தை மட்டும் வைத்து செய்யபடும் அரசியல் இப்படித்தான் இருக்கும்.
பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடும், உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பும், பொது சிவில் சட்ட சர்ச்சையும் இப்போதைக்கு இந்த நாட்டிற்கு உகந்தவை அல்ல.
பெரும் குழப்பத்தினை நோக்கி இந்த நாட்டை நடத்துகின்றார்கள்.
Tuesday, July 5, 2016
Monday, July 4, 2016
கொடூரக் கொலைகள்
மேட்டூர் அருகே 7 வயது குழந்தை கற்பழித்து கொலை
# சுவாதி கொலையினை விட 100 மடங்கு கொடூரமான விஷயம் இது, ஆனால் அது சென்னையும் அல்ல, கொல்லபட்ட இடம் ரயில் நிலையமும் அல்ல,வெட்டுபட்டு செத்தாலும் இனி சென்னையில் அதுவும் பொதுஇடத்தில்தான் சாகவேண்டும்
# குழந்தைகளுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பாதுகாப்பும் சட்டமும் என்றால் வருங்காலம் செழிக்குமா? மேலைநாடு என்றால் இந்நேரம் தேசம் அலறி இருக்கும்.
# இங்கோ ராம்குமார் கைதுகுறித்து ஆளுக்கொரு புலனாய்வு கதை சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அக்குழந்தையினை நினைக்க நேரம் ஏது?
# இவ்வகை குற்றவாளியினை பெரு நகரத்தில் பொது இடத்தில் கதற கதற கொல்லாமல் விட கூடாது, இவனைபோன்றவர்களை மிருகம் கூட இனத்தில் சேர்க்காது, சாத்தான் கூட நரகத்தில் சேர்க்காது.
# சுவாதி கொலையினை விட 100 மடங்கு கொடூரமான விஷயம் இது, ஆனால் அது சென்னையும் அல்ல, கொல்லபட்ட இடம் ரயில் நிலையமும் அல்ல,வெட்டுபட்டு செத்தாலும் இனி சென்னையில் அதுவும் பொதுஇடத்தில்தான் சாகவேண்டும்
# குழந்தைகளுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பாதுகாப்பும் சட்டமும் என்றால் வருங்காலம் செழிக்குமா? மேலைநாடு என்றால் இந்நேரம் தேசம் அலறி இருக்கும்.
# இங்கோ ராம்குமார் கைதுகுறித்து ஆளுக்கொரு புலனாய்வு கதை சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அக்குழந்தையினை நினைக்க நேரம் ஏது?
# இவ்வகை குற்றவாளியினை பெரு நகரத்தில் பொது இடத்தில் கதற கதற கொல்லாமல் விட கூடாது, இவனைபோன்றவர்களை மிருகம் கூட இனத்தில் சேர்க்காது, சாத்தான் கூட நரகத்தில் சேர்க்காது.
விவேகானந்தர் - நினைவு நாள்
இந்த தேசம் கண்ட பெரும் ஞானியும், தேச பற்றினை தூண்டிவிட்ட பெரும் கணலுமான விவேகானந்தரின் நினைவுநாள் இன்று
இளம் வயதிலே பொங்கிவிட்ட ஞானம், கூர்மையான அறிவு, நெஞ்செல்லாம் துணிவு, வாக்கினில் ஒரு தீர்க்கம் என பெரும் சூரியனாக வலம் வந்தவர் அவர்.
பாரதி முதல் பலபேர் வரை அவரின் உரையிலே எழும்பினார்கள், அவரின் வார்த்தை உந்துசக்தியிலே இயங்கினார்கள்.

உண்மையில் இந்திய தேசிய எழுச்சியினை அவர்தான் தொடங்கி வைத்தார், முதன் முதலாக இத்தேசம் பெரும் எழுச்சிபெறும் என முழங்கியதும் அவரே.
மதநெறி கடலளவு உண்டே தவிர, மதவெறி என்பது அவரிடம் துளியுமில்லை.
எல்லா மதத்தையும் அடியாழம் வரை சென்று படித்தவர். அதனால்தான் சிகாகோ மாநாட்டில் மற்ற மதங்களை எல்லாம் காட்டி நீங்களெல்லாம் பெண்களை அடிமையாக வைத்திருக்கும்போதும் எமது கலாச்சாரத்தில் மனைவி தவிர மற்ற பெண்களை எல்லாம் "தாயே..." என்றுதான் எம் தேசத்தார் அழைப்பார்கள் என அவரால் முழங்க முடிந்தது.
அவரின் ஞானத்திற்கு சில உவமை கதைகளே போதும், பைபிளின் இயேசுவிற்கு பின் உலகம் கண்ட அற்புத உவமைகள் அவை.
மதவகை மாநாட்டில் கலந்து கொண்டு இந்து என்பதனை மதமாக சொல்லாமல், இந்நாட்டின் கலாச்சாரமாக சொல்லிசிறப்பு செய்த பெரும் தேசபக்தன் அவர்.
துறவிக்கு அவர் இவ்வுலகில் பெருமகன் இயேசுவிற்கு பின் பெரும் எடுத்துகாட்டு, துறவு வாழ்க்கைக்கு இலக்கணமிட்டவர்.
இந்நாளில் இந்த நாட்டின் இளைஞர்கள், தேசபக்தி ஊறவேண்டும் என்றால் படிக்கவேண்டிய பாடம் இவரின் அறிவுபூர்வமான போதனைகளே
மதம், இனம், மொழி என அழிச்சாட்டியம் செய்யும் யாரும், விவேகானந்தரை ஒரு முறை படித்துவிட்டால் இந்த தேசத்தை பெரும் அபிமானத்தோடு நேசிக்க தொடங்குவார்கள்.
பள்ளிகளில் சர்க்கஸ் வித்தை காட்டும் யோகாவும், புரியாத சமஸ்கிருதத்தை விட மகா முக்கியமானது விவேகானந்தரின் போதனைகள், எல்லா மாணவர்களும் ஒரு நாளில் 10 நிமிடமாவது அவரை படித்தால் போதும்
அவர் சொன்ன புதிய பாரதம், வலுவான பாரதமாய் அமையும்
உலகமே பணிந்து வணங்கிய அவரை பெற்ற இந்த திருநாட்டை வாழ்த்தி வணங்கி விவேகானந்தரை நினைவு கூர்வோம்
இன்று அவருக்கு நினைவுநாள்
இந்த தேசம் கண்ட் பெரும் ஞான சூரியன்களில் சந்தேகமே இல்லாமல் முதலிடம் அவருக்கே.
"வீர இளைஞர்களே இந்த நாடு பெரும் முன்னேற்றமடைய நீங்களே வழி, நீங்களே நம்பிக்கை.
இந்த நாட்டு முன்னேற்றம் தேரை நகர்த்த அதன் சக்கரமாக மாறுங்கள், ஆக்கபூர்வமான பணிகளால் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடு படுங்கள்
இந்த அன்னை நாடு பெரும் வளர்ச்சிபெற்று, உலகிற்கே ஒளிவீசும் தியாக நாடாய் திகழும் பெரும் உருவம் என் கண்ணில் தெரிகின்றது"
இப்படி நாட்டினை பற்றி பெரும் கனவோடும், நம்பிக்கையோடும் வாழ்ந்த அவரை ஒரு மதவாதியாய் பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு மண்ணும் தெரியாதவர்கள், இந்நாட்டின் வெற்று சுமைகள்.
அவரை தேசபிமானியாகவே காண வேண்டும், அவர் அப்படித்தான் வாழ்ந்தார், அப்படித்தான் முழங்கினார். அவரை மாணவர்கள் மத்தியில் மட்டும் பதிய வையுங்கள் இந்த தேசம் பின்னாளில் பெரும் மாறுதலை சந்திக்கும்.
இந்த தேசம் முழுமையும் சுற்றி வந்த ஆண்மீக சூரியன் அவர். முக்கடலின் குமரியில் அந்த தவதிருமகனுக்கு நினைவாலயம் அமைந்துவிட்டது, அது பாராட்டுகுரியது.
அப்படியே சிகாகோ உலக சமயமாநாட்டை உலுக்கி எடுத்துவிட்டு அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த இடம் தமிழக பாம்பன் அருகே உள்ள ஒரு கடற்கரை, காரணம் ராமநாதபுரம் மன்னர்தான் அவரை அனுப்பி வைத்தார், அந்த நன்றிக்காக தமிழகத்திற்கு அந்த பெரும் பெருமையினை கொடுத்தார் விவேகானந்தர்.
இன்று அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டபட்டிருக்கின்றது, அது நிச்சயம் பெரும் வரலாற்று மண்டபம், அவ்விடத்தில் பெரும் வரலாற்று புகழ் சொற்பொழிவு அவரால் நிகழ்த்தபட்டது
இப்படியாக தமிழகத்திற்கும் விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பிரிக்கமுடியாதது, தமிழகம் பெரும் ஆண்மீக பூமி என்பதில் பெரும் கருத்துகொண்டிருந்தார் விவேகானந்தர்.
இந்த தேசத்தின் மிக சிறந்த குடிமகனின், ஞான திருமகனின், அவதார பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதில் கண்ணோரம் நீர் துளிர்க்கின்றது
மனமோ எமது நாட்டிலும் ஒரு பிரபஞ்ச யோகி , நாட்டுபற்று சன்னியாசி உதித்திருக்கின்றான் என்பதனை நினைத்து மகிழ்வுகொள்கின்றது
அவரது தேசம்பற்றிய போதனையே இந்நாட்டின் மாணவர்களுக்கு தேசபற்றின் பாலபாடம் என்பது மட்டும் உண்மை.
யாருடா நீ - "உங்களில் ஒருவன்" ?
தமிழ் அங்கு தான் பிறந்தது, உலகின் மிக தொன்மையான நாகரீகம் அங்குதான் ஆதிச்சநல்லூரில் உறங்கிகொண்டிருக்கின்றது
பாரதி முதல் வஉசி வரை கொடுத்தது அந்த மண்தான், வெள்ளையன் கோட்டை கட்டிய சென்னையினை விட, அவனை ஓட விரட்டிய பூலித்தேவனும், கட்டபொம்மனும் பிறந்த மண் இது
ஒரு காலத்தில் தமிழக இலக்கிய உலகமே அங்குதான் இருந்தது அகத்தியர் காலம் முதல் வையாபுரிபிள்ளை, இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்கள் காலம் வரை நெல்லையே தமிழின் இருப்பிடம், வசிப்பிடம்.
குற்றால குறவஞ்சி முதல் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் உருவான வரலாறு நெல்லைக்கு உண்டு,
பழக்க வழக்கங்களிலும், தனி தன்மையினை காப்பதிலும், பழமைகால தொடர்பிலும் அக்கால அறிவிற் சிறந்த யாழ்பாணத்துடன் பெரும் தொடர்பு கொண்டது எமது நெல்லை மண். தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் இல்லா சிறப்பு அது.
அதனால்தான் தமிழில், அறிவில், கல்வியில், தன்மான உணர்வில் யாழ்பாணமும் நெல்லையும் இன்றுவரை உலகில் தனித்து தெரிகின்றன.
கல்வியில், வீரத்தில், அறிவியலில், பக்தியில், பத்திரிகையில். சினிமாவில்
தொழில் வரிசையில், விவசாயத்தில் மிக சிறந்த இந்த நெல்லை மண்ணைவிட இன்னொரு மண்ணை தமிழகத்தில் காட்டிவிடுங்கள், காட்டிவிட்டு பேசுங்கள்
எவனோ எவளையோ எதற்காகவோ வெட்டிவிட்டான் என்றால் மொத்த நெல்லையரும் காட்டுமிராண்டிகள் என சொல்ல நீர் யார்?
சிங்கார சென்னையின் இன்றைய வளர்ச்சிக்கு அவர்களும் ஒரு காரணம், சென்னையில் நெல்லையர்களின் முத்திரை அப்படியானது,
[gallery ids="1205,1202" type="circle" columns="2" orderby="rand"]
இந்த மாபெரும் தேசத்திற்கும் அவர்களின் பங்களிப்பு சீக்கியர்களுக்கு அடுத்து குறிப்பிடதக்கது, மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம் , தூத்துகுடி துறைமுகம்எ ன பல வகை கேந்திர முக்கியத்துவங்களை கடும் உயிர் ஆபத்துகளுக்கு இடையில் தாங்கி நிற்கும் பகுதி அது.
தூத்துகுடியால் இம்மாநிலம் அள்ளும் பணம் கொஞ்சமா?
மற்ற மாவட்டத்துக்காரர்கள் எல்லாம் கொலையே செய்யவில்லையா? சமீபத்தில் சென்னையில் 10 பொதுமக்களை வெட்டிய ரவுடிகளுக்காக, சரிகா ஷா கொலைக்காக இன்னும் பல மர்ம கொலைகளுக்காக நாங்கள் என்ன சென்னையினை தனியாக பிரிக்க சொன்னோமா?
நெல்லையும் தூத்துகுடியும் அதன் மக்களும் இந்த தேசத்திற்காக ஆற்றிவரும் பெரும் சேவைகள் கொஞ்சமல்ல,
எங்களை பிரித்துவிட சொல்ல நீர் யார்? காட்டுமிராண்டிகளிடம் வாழமுடியாது என ஓடிவந்த குமரி மக்களையே அணைத்துகொண்டு இன்றுவரை அமைதியாக வாழ்ந்து வருபவர்கள் நாங்கள்,
இவர் யாரென்று தெரியாது, மொத்த நெல்லை தூத்துகுடி மக்களை காட்டுமிராண்டி என முத்திரை குத்தும் இவரை மிக விரைவில் நண்பர்கள் கண்டுபிடிப்பார்கள்.
அன்று நெல்லையின் முக்கியத்துவம் பற்றி இவருக்கு கதற கதற காதில் கற்பிப்போம்.
உப்பு முதல் இவர் அணியும் ஜவுளி வரை நெல்லையர் பங்கில்லாமல் இவரால் தமிழகத்தில் வாழ முடியுமா?
என்னது "உங்களில் ஒருவனா" சீ சீ இருக்கவே முடியாது, எங்களில் ஒருவன் இப்படி பைத்தியகாரதனமாக உளரமாட்டான்.
நீர் கீழ்பாக்கம் சென்று இப்படி சொல்லலாம் மிக சரியாக பொருந்தும்.
பாரதி முதல் வஉசி வரை கொடுத்தது அந்த மண்தான், வெள்ளையன் கோட்டை கட்டிய சென்னையினை விட, அவனை ஓட விரட்டிய பூலித்தேவனும், கட்டபொம்மனும் பிறந்த மண் இது
ஒரு காலத்தில் தமிழக இலக்கிய உலகமே அங்குதான் இருந்தது அகத்தியர் காலம் முதல் வையாபுரிபிள்ளை, இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்கள் காலம் வரை நெல்லையே தமிழின் இருப்பிடம், வசிப்பிடம்.
குற்றால குறவஞ்சி முதல் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் உருவான வரலாறு நெல்லைக்கு உண்டு,
பழக்க வழக்கங்களிலும், தனி தன்மையினை காப்பதிலும், பழமைகால தொடர்பிலும் அக்கால அறிவிற் சிறந்த யாழ்பாணத்துடன் பெரும் தொடர்பு கொண்டது எமது நெல்லை மண். தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் இல்லா சிறப்பு அது.
அதனால்தான் தமிழில், அறிவில், கல்வியில், தன்மான உணர்வில் யாழ்பாணமும் நெல்லையும் இன்றுவரை உலகில் தனித்து தெரிகின்றன.
கல்வியில், வீரத்தில், அறிவியலில், பக்தியில், பத்திரிகையில். சினிமாவில்
தொழில் வரிசையில், விவசாயத்தில் மிக சிறந்த இந்த நெல்லை மண்ணைவிட இன்னொரு மண்ணை தமிழகத்தில் காட்டிவிடுங்கள், காட்டிவிட்டு பேசுங்கள்
எவனோ எவளையோ எதற்காகவோ வெட்டிவிட்டான் என்றால் மொத்த நெல்லையரும் காட்டுமிராண்டிகள் என சொல்ல நீர் யார்?
சிங்கார சென்னையின் இன்றைய வளர்ச்சிக்கு அவர்களும் ஒரு காரணம், சென்னையில் நெல்லையர்களின் முத்திரை அப்படியானது,
[gallery ids="1205,1202" type="circle" columns="2" orderby="rand"]
இந்த மாபெரும் தேசத்திற்கும் அவர்களின் பங்களிப்பு சீக்கியர்களுக்கு அடுத்து குறிப்பிடதக்கது, மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம் , தூத்துகுடி துறைமுகம்எ ன பல வகை கேந்திர முக்கியத்துவங்களை கடும் உயிர் ஆபத்துகளுக்கு இடையில் தாங்கி நிற்கும் பகுதி அது.
தூத்துகுடியால் இம்மாநிலம் அள்ளும் பணம் கொஞ்சமா?
மற்ற மாவட்டத்துக்காரர்கள் எல்லாம் கொலையே செய்யவில்லையா? சமீபத்தில் சென்னையில் 10 பொதுமக்களை வெட்டிய ரவுடிகளுக்காக, சரிகா ஷா கொலைக்காக இன்னும் பல மர்ம கொலைகளுக்காக நாங்கள் என்ன சென்னையினை தனியாக பிரிக்க சொன்னோமா?
நெல்லையும் தூத்துகுடியும் அதன் மக்களும் இந்த தேசத்திற்காக ஆற்றிவரும் பெரும் சேவைகள் கொஞ்சமல்ல,
எங்களை பிரித்துவிட சொல்ல நீர் யார்? காட்டுமிராண்டிகளிடம் வாழமுடியாது என ஓடிவந்த குமரி மக்களையே அணைத்துகொண்டு இன்றுவரை அமைதியாக வாழ்ந்து வருபவர்கள் நாங்கள்,
இவர் யாரென்று தெரியாது, மொத்த நெல்லை தூத்துகுடி மக்களை காட்டுமிராண்டி என முத்திரை குத்தும் இவரை மிக விரைவில் நண்பர்கள் கண்டுபிடிப்பார்கள்.
அன்று நெல்லையின் முக்கியத்துவம் பற்றி இவருக்கு கதற கதற காதில் கற்பிப்போம்.
உப்பு முதல் இவர் அணியும் ஜவுளி வரை நெல்லையர் பங்கில்லாமல் இவரால் தமிழகத்தில் வாழ முடியுமா?
என்னது "உங்களில் ஒருவனா" சீ சீ இருக்கவே முடியாது, எங்களில் ஒருவன் இப்படி பைத்தியகாரதனமாக உளரமாட்டான்.
நீர் கீழ்பாக்கம் சென்று இப்படி சொல்லலாம் மிக சரியாக பொருந்தும்.
ஜாக்கிச்சான்
இன்றைய உலகில் சர்வ சக்தி வாய்ந்த நடிகர் ஜாக்கிசான், உலகின் பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர், அதனை விட நல்ல மனிதர் என்ற பெயர் உண்டு. நடிகர்களில் இனி ஒருவன் அவர் அளவு சம்பாதிப்பதிப்பென்பது 50 ஆண்டுகள் கழித்து கூட கனவிலும் நடக்காதது.
ஆனால் சோகமான புத்திரபாக்கியம்.

தவறான சேர்க்கையினால் அவன் போதை பழக்கத்தில் சிக்கிவிட சீன அரசு அவன்மேல் நடவடிகை எடுத்தது, அவர் நினைத்திருந்தால் அதனை வேறுமாதிரி அரசியல் செய்து சீன அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, என் மகன் குற்றமற்றவன் என பெரும் பிரளயம் செய்திருக்கலாம், உலக நாடுகளே ஓடி வந்திருக்கும்.
ஆனால் அவர் என்ன செய்தார்?
"இந்நாட்டிற்கு நல்ல குடிமகனை தராத என்னை மன்னித்துவிடுங்கள், அவனை நல்ல சீன குடிமகனாக வளர்க்க நான் தவறிவிட்டேன்" என மன்னிப்பு கேட்டு தன் சொத்துக்களில் பெரும்பாலவவற்றை அனாதை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.
"என் மகன் தான் உருப்படவில்லை, இன்னொரு நல்ல சீன குடிமகன் உருவாகட்டும்.."
அவரையும் , அற்புதம்மாளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
நாட்டுபற்று என்றால் என்ன என்பது தெரியும், சாதாரண போதை வழக்கிற்கும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்பவர் அவர், தன் மகனின் தேசவிரோத கும்பல் தொடர்பு தெரிந்தும் இன்னமும் குற்றமற்றவன் என சொல்லிகொண்டிருப்பவர் இவர்.
ஜாக்கிசானின் உறவினர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை ஆமோதித்தார்கள், ஆனால் அற்புதம்மாள் பின்னால் செல்பவர்களின் அழிச்சாட்டியம் தாளவில்லை, இப்போது சின்ன சாந்தன் எனும் அந்நிய நாட்டு தாயினை சேர்த்துகொண்டார்கள்.
ஏன் ராம்குமாரின் தாய் தமிழச்சிதானே, எவனாவது பேசினானா? இவ்வளவிற்கும் தமிழக தமிழச்சி. இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது
சல்யூட் ஜாக்கிசான், இப்படி குடிமக்கள் இருந்த பின் சீனா ஏன் வல்லரசாக உலகை மிரட்டாது?
ஆனால் சோகமான புத்திரபாக்கியம்.

தவறான சேர்க்கையினால் அவன் போதை பழக்கத்தில் சிக்கிவிட சீன அரசு அவன்மேல் நடவடிகை எடுத்தது, அவர் நினைத்திருந்தால் அதனை வேறுமாதிரி அரசியல் செய்து சீன அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, என் மகன் குற்றமற்றவன் என பெரும் பிரளயம் செய்திருக்கலாம், உலக நாடுகளே ஓடி வந்திருக்கும்.
ஆனால் அவர் என்ன செய்தார்?
"இந்நாட்டிற்கு நல்ல குடிமகனை தராத என்னை மன்னித்துவிடுங்கள், அவனை நல்ல சீன குடிமகனாக வளர்க்க நான் தவறிவிட்டேன்" என மன்னிப்பு கேட்டு தன் சொத்துக்களில் பெரும்பாலவவற்றை அனாதை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.
"என் மகன் தான் உருப்படவில்லை, இன்னொரு நல்ல சீன குடிமகன் உருவாகட்டும்.."
அவரையும் , அற்புதம்மாளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
நாட்டுபற்று என்றால் என்ன என்பது தெரியும், சாதாரண போதை வழக்கிற்கும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்பவர் அவர், தன் மகனின் தேசவிரோத கும்பல் தொடர்பு தெரிந்தும் இன்னமும் குற்றமற்றவன் என சொல்லிகொண்டிருப்பவர் இவர்.
ஜாக்கிசானின் உறவினர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை ஆமோதித்தார்கள், ஆனால் அற்புதம்மாள் பின்னால் செல்பவர்களின் அழிச்சாட்டியம் தாளவில்லை, இப்போது சின்ன சாந்தன் எனும் அந்நிய நாட்டு தாயினை சேர்த்துகொண்டார்கள்.
ஏன் ராம்குமாரின் தாய் தமிழச்சிதானே, எவனாவது பேசினானா? இவ்வளவிற்கும் தமிழக தமிழச்சி. இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது
சல்யூட் ஜாக்கிசான், இப்படி குடிமக்கள் இருந்த பின் சீனா ஏன் வல்லரசாக உலகை மிரட்டாது?
Saturday, July 2, 2016
சைமன் வாய் ராசி...
ஆனாலும் ஆயிரம் சொல்லுங்கள், அங்கிள் சைமன் வாய்ராசி யாருக்கும் வராது
புலிகள் பற்றி பேசினார் புலிகள் அழிந்தனர் , அல்லது புலிகள் அழிந்தபின் தான் பேசவந்தார், இப்போது இலங்கை மகா அமைதி.
சென்னை வெள்ளத்தில் உதவ மூங்கில் தெப்பம் அவர் கட்டும்போதே சென்னை வெள்ளம் வடிந்துவிட்டது
நேற்றுதான் பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் வேண்டும் என அவர் சொல்லும்போதே குற்றவாளி பிடிபட்டிருக்கின்றான்
# சூப்பர் வாய்ராசி அங்கிள் சைமன், எல்லாம் முடிந்தபின் பேசுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும்போதுதான் பிரச்சினை முடிகிறதா?
புலிகள் பற்றி பேசினார் புலிகள் அழிந்தனர் , அல்லது புலிகள் அழிந்தபின் தான் பேசவந்தார், இப்போது இலங்கை மகா அமைதி.
சென்னை வெள்ளத்தில் உதவ மூங்கில் தெப்பம் அவர் கட்டும்போதே சென்னை வெள்ளம் வடிந்துவிட்டது
நேற்றுதான் பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் வேண்டும் என அவர் சொல்லும்போதே குற்றவாளி பிடிபட்டிருக்கின்றான்
# சூப்பர் வாய்ராசி அங்கிள் சைமன், எல்லாம் முடிந்தபின் பேசுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும்போதுதான் பிரச்சினை முடிகிறதா?
ஸ்வாதி கொலையாளி
மிக விரைந்து சுவாதி குற்றவாளியினை தூக்கியிருக்கின்றது தமிழக காவல்துறை, , இனி அவன் வாய்திறந்தால் பல உண்மைகள் வரும்.
அவனும் பொறியியல் பட்டதாரி, ஆனால் பாருங்கள் கொலைகுற்றவாளியாகத்தான் அவன் வாழ்வு இனிபார்க்கபடும், அவன் சகோதரி கதறிகொண்டிருக்கின்றாள், அவனை பெற்று வளர்த்து .

படிக்கவைத்த ஒரே பாவத்திற்காக அவன் பெற்றோர்கள் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கின்றார்கள், காரணம் காவல்துறை விசாரணை பல கோணங்களில் பாயும்போது அவர்களும் விசாரிக்கடுவார்கள், பட்டே ஆகவேண்டும்
இதற்கெல்லாம் காரணம் இரண்டு, ஒன்று அவள் தன்னை காதலித்தே ஆகவேண்டும் என்ற அதிகார எண்ணமும், தனக்கு இல்லை என்றால் யாருக்குமில்லை என்ற கொடூர சிந்தனையும் தவிர வேறு ஒன்றுமில்லை, அவளுக்கொரு மனமிருக்கும் என்றோ, அவளுக்கொரு வாழ்க்கை கனவு இருந்திருக்குமென்றோ, அவள் பெற்றோரை எண்ணி பார்த்தாலோ இந்த கொடூரம் புரிந்திருக்கமாட்டான்
ஒரே அடிப்படை காரணம் பெண் என்பவள் ஒரு சொத்து, பெண் என்பவள் ஆண் அடைந்தே தீரவேண்டிய ஒரு பொருள் என அவன் சிந்தித்ததே, அதுதான் காரணம்.
மானிட வாழ்வின் தொடக்க காலத்தில் பெண்ணே அதிகாரமிக்கவள், பெண்ணே தெய்வம். அவள்தான் அதிகாரம், இன்றும் ஆதிகால தொடர்ச்சியாக உள்ள பழங்குடியினரிடம் அதனை நீங்கள் காணலாம்.
இன்றும் பெண் தெய்வங்கள் இருந்துகொண்டிருக்க அதுதான் காரணம். சுயவரம் என்பதன் அதன் தொடர்ச்சியே.
பின்னாளில் தான் ஆண்கள் அதிகாரம் பெற்று,பெண்களை அடக்கவும் மதங்கள் உருவாகவும் பெண்ணடிமை தனம் கூடிற்று, யூதமதமும் அதனிலிருந்து உருவான இஸ்லாம் கிறிஸ்தவம் என எல்லா மதமும் பெண்ணடிமை தனத்தை வலியுறுத்துவதே, மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதியான ஆரியர் கலாச்சாரமும் அதுவே, கிழக்காசிய கலாச்சாரங்களும் அப்படியே
வீட்டை விட்டு வெளியே வர அவர்கள் அனுமதிக்கபடுவதில்லை, வாய்பேசும் ஆடுமாடுகளில் ஒன்றாகத்தான் அவர்களை உலகம் கருதிற்று, ஐரோப்பா உட்பட.
நாகரீக உலகில் அடிமைத்தனம் ஒழிக்கபட்டபின் பெண்ணுரிமை குரல்கள் எழும்பின, பெண்களுக்கு உலகில் வாக்குரிமை வழங்கபட்டே 100 ஆண்டுகள்தான் ஆகின்றது, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, பெண்கள் சுதந்திரமாக படிக்கவும், பணியாற்றவும் அவள் சொந்தகாலில் நிற்கவும் சூழல் வந்துவிட்டது.
எத்தனை பெண்ணியம், பெண்ணடிமைதனம், என பல குரல்கள் எழும்பினாலும், பெண்கள் தனியாக இவ்வுலகில் வாழும் சூழல் வந்தாலும் இன்னும் மாறாதது ஒன்று உண்டு
அது ஆண்களின் மனது
பெண்ணின் மனம் தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், அவள் தனக்கான சொத்து என்றளவிலே இன்றளவும் ஆண் மனது சிந்தித்துகொண்டிருக்கின்றது, அந்த சிந்தனை மாற வேண்டும், பெண்விடுதலை என்பது பெண்களை சுதந்திரமாக வெளியே விடுவது அல்ல, மாறாக ஆண்களும் தங்கள் சிந்தனையினை மாற்றிகொள்வது.
இன்னொன்று தனக்கு இப்படி ஒரு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றால் அன்றே அப்பெண் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ சொல்லி இருக்கலாம், இது பிடிக்கவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்றால் எந்த தந்தை காப்பாற்றமாட்டார்? ஒய் ஜி மகேந்திரனிடமும், எஸ் வி சேகரிடமும் சொல்லமுடியாது, ஆனால் தந்தையிடமும், தோழியிடமுமா? சொல்ல கூடாது?
இப்படி தன் உடல் அல்லாத இன்னொரு பெண்ணின் உடலோடு தன் முகத்தை பொருத்தி வன்மத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கி இருக்கின்றாள், அந்த உடலுக்கு சொந்தகாரியே இவ்வுலகில் உயிரோடு வாழும்போது, இப்பெண் மாளவேண்டிய அவசியம் என்ன?
கல்வி முறை தொழிலுக்கான அறிவினை தருமே தவிர, வாழ்க்கைக்கான அறிவினை கொடுக்காது, மன நலத்தினை வளர்க்காது , அக்க்கால கல்விமுறை அதனை நிரம்ப கொடுத்தது, இக்கால கல்விமுறை இப்படி கொலைகாரர்ர்களை உருவாக்குகின்றது, மருத்துவர், வக்கீல், பொறியாளர் என பல கொலைகாரர்கள் உருவாகின்றார்கள்
மனநலம் வளர்ப்பதில் நம் சமூகம் தோற்றுகொண்டிருக்கின்றது. காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் காதலித்து இப்படி செத்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையில் அவளை அவன் மனதார காதலித்து, அவள் வாழ்வு செழிக்கவேண்டும் என நினைத்திருந்தால் இப்பாதகம் செய்ய துணிவானா?, இது வெறும் இனகவர்ச்சி, பருவகால மேகம், நிச்சயம் கடந்து போக கூடிய உணர்வு
எப்படியோ ஒரு நொடி உணர்ச்சி வேகம், இரு குடுமத்தினை தீரா சோகத்தில் தள்ள்விட்டது, வாழவேண்டிய தளிர்களில் ஒன்று மாண்டுவிட்டது, இன்னொன்று சிறையில் கிடக்கின்றது
இருவருமே பொறியாளர்கள் என்பதுதான் குறிப்பிடதக்கது,பெரும் சோகம் நெஞ்சை பிழியும் தருணம் இது.
காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் அவன் உங்க ஊரா சார்.. என கேட்பதிலே தலை குனியத்தான் வேண்டியிருக்கின்றது.
காவல்துறை தன் திறமையினை காட்டி இருக்கின்றது, 5 நாட்களுக்குள் வேறு குற்றவாளியினை தேடுவது போல் இவனை விட்டுவிட்டு, மகா ரகசியமாக இவனை தூக்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள்
இதனை போலவே விரைவில் ராமஜெயம் குற்றவாளிகளும் தூக்கட்டு நம் பெருமை மிகு காவல்துறை தன் உயர்ந்த திறமையினை நிருபீக்கட்டும்
சல்யூட் சார்
பெரும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் கொலை செய்யலாம், அல்லது பெரும் ரகசியத்திற்காக அரசியல்வாதிகளின் கூட்டாளிகள் கொலை செய்யபடலாம், அந்த வழக்கு தூங்கும் அல்லது தூங்க வைக்கபடும், 200 சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள் அது விசாரணை, அது நீதி, நியாயம்.
வைரவேல் காணமல் போன சோகத்தில் மேலாளர் செத்தபின் தானாக தூக்குபோடுவார், வாக்கிங் செல்லும் அரசியல்வாதி தலைசுற்றி மிக சரியாக அரிவாள் மீது 4 முறை விழுந்து சாவார், இது போன்ற பல மர்மான தற்கொலைகள் நடந்த தமிழகம் இது.
அப்படி இல்லை என்றால் ஆடி காரில் வந்து யாரையாவது தூக்க வேண்டும், அப்படி செய்தால் ஆடி காரினைத்தான் கைது செய்வார்கள், 20 ஆடுகளுக்கு பதில் 200 கோடிகள் ராம்குமார் வீட்டில் இருந்தால் கூட இந்நேரம் அந்த அரிவாளைத்தான் கைது செய்திருப்பார்கள்,
அதனை விட்டு விட்டு ஏழை வீட்டில் பிறந்துவிட்டு இந்நாட்டில் கொலை செய்ய ஆசைபடலாமா அய்யா..
இரு தங்கைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், தாயின் கண்ணீரும், அவனுக்காக ஓட்டுவீட்டை கூட மாற்றாமல் வாழ்ந்த அந்த தந்தையின் தியாகமும், கொஞ்சம் கூட பாதிக்காத அவன் மனதினை, ஒரு பெண்தான் பாதித்தாள் என்றால், அவளுக்காக அரிவாள் தூக்கும் அளவிற்கு சென்றுவிட்டான் என்றால்
அவள் சொன்னபடியே நிச்சயம் அவன் நிச்சயம் தேவாங்கு தான்.
அந்த அரிவாளை பார்த்தபின்னும், ஓங்கிய பின்னும் அவன் சிந்திக்கவில்லை, இவளை வெட்டுவதற்கு பதில் வாழைக்காய் வெட்டியோ, ஆட்டிற்கு தழை வெட்டியோ தன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாமே. சுவாதி குடும்பமும் காப்பாற்றபட்டிருக்கும்,
கொஞ்சமேனும் சிந்திக்காத அவன் தேவாங்கினை விட நிச்சயம் மோசமானவன்.

பாலும் பழமும் படத்தில் ஒருவர் எம்.ஆர் ராதாவிடம் அசிஸ்டெண்டாக பச்சிலை இடித்துகொண்டிருப்பார், படத்தில் அவர் பெயர் தேவாங்கு, தலைவர் தயாரிக்கும் லேகியத்தின் பெயர் தேவாங்கு ராக்கெட் லேகியம் ,
சிவாஜி கணேசனிடம் , தனக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லுவார் தமிழின தேசிய தலைவர் மேதகு எம்.ஆர் ராதா
"தேவாங்கு ராக்கெட் லேகியம்மு ஒண்ணு தயார் பண்றேன், சாப்பிட்டா அப்பிடி மேலேயும் கீழேயும் போய்ட்டு போய்ட்டு வரலாம்..."
சுவாதி கொலையாளிக்கு நீதிபதி என்ன தண்டனை அந்த ராம்குமாருக்கு கொடுக்கபோகின்றார் என்பது வேறுவிஷயம், ஆனால் ஒரு நாளைக்கு 4 முறை இந்த தேவாங்கு ராக்கெட் லேகியம் காமெடியினை பார்க்கவைத்தால் அதுவே பெரும் தண்டனை
கூடவே அந்த டயலாக்கினினை சொல்ல வைத்தால் நன்றாக இருக்கும் "தேவாங்கு ராக்கெட் லேகியம் சாப்பிட்டால் நுங்கம்பாக்கம் டு புழல் ஜெயில் போய்ட்டு போய்ட்டு வரலாம்.
அவனும் பொறியியல் பட்டதாரி, ஆனால் பாருங்கள் கொலைகுற்றவாளியாகத்தான் அவன் வாழ்வு இனிபார்க்கபடும், அவன் சகோதரி கதறிகொண்டிருக்கின்றாள், அவனை பெற்று வளர்த்து .

படிக்கவைத்த ஒரே பாவத்திற்காக அவன் பெற்றோர்கள் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கின்றார்கள், காரணம் காவல்துறை விசாரணை பல கோணங்களில் பாயும்போது அவர்களும் விசாரிக்கடுவார்கள், பட்டே ஆகவேண்டும்
இதற்கெல்லாம் காரணம் இரண்டு, ஒன்று அவள் தன்னை காதலித்தே ஆகவேண்டும் என்ற அதிகார எண்ணமும், தனக்கு இல்லை என்றால் யாருக்குமில்லை என்ற கொடூர சிந்தனையும் தவிர வேறு ஒன்றுமில்லை, அவளுக்கொரு மனமிருக்கும் என்றோ, அவளுக்கொரு வாழ்க்கை கனவு இருந்திருக்குமென்றோ, அவள் பெற்றோரை எண்ணி பார்த்தாலோ இந்த கொடூரம் புரிந்திருக்கமாட்டான்
ஒரே அடிப்படை காரணம் பெண் என்பவள் ஒரு சொத்து, பெண் என்பவள் ஆண் அடைந்தே தீரவேண்டிய ஒரு பொருள் என அவன் சிந்தித்ததே, அதுதான் காரணம்.
மானிட வாழ்வின் தொடக்க காலத்தில் பெண்ணே அதிகாரமிக்கவள், பெண்ணே தெய்வம். அவள்தான் அதிகாரம், இன்றும் ஆதிகால தொடர்ச்சியாக உள்ள பழங்குடியினரிடம் அதனை நீங்கள் காணலாம்.
இன்றும் பெண் தெய்வங்கள் இருந்துகொண்டிருக்க அதுதான் காரணம். சுயவரம் என்பதன் அதன் தொடர்ச்சியே.
பின்னாளில் தான் ஆண்கள் அதிகாரம் பெற்று,பெண்களை அடக்கவும் மதங்கள் உருவாகவும் பெண்ணடிமை தனம் கூடிற்று, யூதமதமும் அதனிலிருந்து உருவான இஸ்லாம் கிறிஸ்தவம் என எல்லா மதமும் பெண்ணடிமை தனத்தை வலியுறுத்துவதே, மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதியான ஆரியர் கலாச்சாரமும் அதுவே, கிழக்காசிய கலாச்சாரங்களும் அப்படியே
வீட்டை விட்டு வெளியே வர அவர்கள் அனுமதிக்கபடுவதில்லை, வாய்பேசும் ஆடுமாடுகளில் ஒன்றாகத்தான் அவர்களை உலகம் கருதிற்று, ஐரோப்பா உட்பட.
நாகரீக உலகில் அடிமைத்தனம் ஒழிக்கபட்டபின் பெண்ணுரிமை குரல்கள் எழும்பின, பெண்களுக்கு உலகில் வாக்குரிமை வழங்கபட்டே 100 ஆண்டுகள்தான் ஆகின்றது, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, பெண்கள் சுதந்திரமாக படிக்கவும், பணியாற்றவும் அவள் சொந்தகாலில் நிற்கவும் சூழல் வந்துவிட்டது.
எத்தனை பெண்ணியம், பெண்ணடிமைதனம், என பல குரல்கள் எழும்பினாலும், பெண்கள் தனியாக இவ்வுலகில் வாழும் சூழல் வந்தாலும் இன்னும் மாறாதது ஒன்று உண்டு
அது ஆண்களின் மனது
பெண்ணின் மனம் தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், அவள் தனக்கான சொத்து என்றளவிலே இன்றளவும் ஆண் மனது சிந்தித்துகொண்டிருக்கின்றது, அந்த சிந்தனை மாற வேண்டும், பெண்விடுதலை என்பது பெண்களை சுதந்திரமாக வெளியே விடுவது அல்ல, மாறாக ஆண்களும் தங்கள் சிந்தனையினை மாற்றிகொள்வது.
இன்னொன்று தனக்கு இப்படி ஒரு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றால் அன்றே அப்பெண் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ சொல்லி இருக்கலாம், இது பிடிக்கவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்றால் எந்த தந்தை காப்பாற்றமாட்டார்? ஒய் ஜி மகேந்திரனிடமும், எஸ் வி சேகரிடமும் சொல்லமுடியாது, ஆனால் தந்தையிடமும், தோழியிடமுமா? சொல்ல கூடாது?
இப்படி தன் உடல் அல்லாத இன்னொரு பெண்ணின் உடலோடு தன் முகத்தை பொருத்தி வன்மத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கி இருக்கின்றாள், அந்த உடலுக்கு சொந்தகாரியே இவ்வுலகில் உயிரோடு வாழும்போது, இப்பெண் மாளவேண்டிய அவசியம் என்ன?
கல்வி முறை தொழிலுக்கான அறிவினை தருமே தவிர, வாழ்க்கைக்கான அறிவினை கொடுக்காது, மன நலத்தினை வளர்க்காது , அக்க்கால கல்விமுறை அதனை நிரம்ப கொடுத்தது, இக்கால கல்விமுறை இப்படி கொலைகாரர்ர்களை உருவாக்குகின்றது, மருத்துவர், வக்கீல், பொறியாளர் என பல கொலைகாரர்கள் உருவாகின்றார்கள்
மனநலம் வளர்ப்பதில் நம் சமூகம் தோற்றுகொண்டிருக்கின்றது. காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் காதலித்து இப்படி செத்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையில் அவளை அவன் மனதார காதலித்து, அவள் வாழ்வு செழிக்கவேண்டும் என நினைத்திருந்தால் இப்பாதகம் செய்ய துணிவானா?, இது வெறும் இனகவர்ச்சி, பருவகால மேகம், நிச்சயம் கடந்து போக கூடிய உணர்வு
எப்படியோ ஒரு நொடி உணர்ச்சி வேகம், இரு குடுமத்தினை தீரா சோகத்தில் தள்ள்விட்டது, வாழவேண்டிய தளிர்களில் ஒன்று மாண்டுவிட்டது, இன்னொன்று சிறையில் கிடக்கின்றது
இருவருமே பொறியாளர்கள் என்பதுதான் குறிப்பிடதக்கது,பெரும் சோகம் நெஞ்சை பிழியும் தருணம் இது.
காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் அவன் உங்க ஊரா சார்.. என கேட்பதிலே தலை குனியத்தான் வேண்டியிருக்கின்றது.
காவல்துறை தன் திறமையினை காட்டி இருக்கின்றது, 5 நாட்களுக்குள் வேறு குற்றவாளியினை தேடுவது போல் இவனை விட்டுவிட்டு, மகா ரகசியமாக இவனை தூக்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள்
இதனை போலவே விரைவில் ராமஜெயம் குற்றவாளிகளும் தூக்கட்டு நம் பெருமை மிகு காவல்துறை தன் உயர்ந்த திறமையினை நிருபீக்கட்டும்
சல்யூட் சார்
பெரும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் கொலை செய்யலாம், அல்லது பெரும் ரகசியத்திற்காக அரசியல்வாதிகளின் கூட்டாளிகள் கொலை செய்யபடலாம், அந்த வழக்கு தூங்கும் அல்லது தூங்க வைக்கபடும், 200 சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள் அது விசாரணை, அது நீதி, நியாயம்.
வைரவேல் காணமல் போன சோகத்தில் மேலாளர் செத்தபின் தானாக தூக்குபோடுவார், வாக்கிங் செல்லும் அரசியல்வாதி தலைசுற்றி மிக சரியாக அரிவாள் மீது 4 முறை விழுந்து சாவார், இது போன்ற பல மர்மான தற்கொலைகள் நடந்த தமிழகம் இது.
அப்படி இல்லை என்றால் ஆடி காரில் வந்து யாரையாவது தூக்க வேண்டும், அப்படி செய்தால் ஆடி காரினைத்தான் கைது செய்வார்கள், 20 ஆடுகளுக்கு பதில் 200 கோடிகள் ராம்குமார் வீட்டில் இருந்தால் கூட இந்நேரம் அந்த அரிவாளைத்தான் கைது செய்திருப்பார்கள்,
அதனை விட்டு விட்டு ஏழை வீட்டில் பிறந்துவிட்டு இந்நாட்டில் கொலை செய்ய ஆசைபடலாமா அய்யா..
இரு தங்கைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், தாயின் கண்ணீரும், அவனுக்காக ஓட்டுவீட்டை கூட மாற்றாமல் வாழ்ந்த அந்த தந்தையின் தியாகமும், கொஞ்சம் கூட பாதிக்காத அவன் மனதினை, ஒரு பெண்தான் பாதித்தாள் என்றால், அவளுக்காக அரிவாள் தூக்கும் அளவிற்கு சென்றுவிட்டான் என்றால்
அவள் சொன்னபடியே நிச்சயம் அவன் நிச்சயம் தேவாங்கு தான்.
அந்த அரிவாளை பார்த்தபின்னும், ஓங்கிய பின்னும் அவன் சிந்திக்கவில்லை, இவளை வெட்டுவதற்கு பதில் வாழைக்காய் வெட்டியோ, ஆட்டிற்கு தழை வெட்டியோ தன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாமே. சுவாதி குடும்பமும் காப்பாற்றபட்டிருக்கும்,
கொஞ்சமேனும் சிந்திக்காத அவன் தேவாங்கினை விட நிச்சயம் மோசமானவன்.

பாலும் பழமும் படத்தில் ஒருவர் எம்.ஆர் ராதாவிடம் அசிஸ்டெண்டாக பச்சிலை இடித்துகொண்டிருப்பார், படத்தில் அவர் பெயர் தேவாங்கு, தலைவர் தயாரிக்கும் லேகியத்தின் பெயர் தேவாங்கு ராக்கெட் லேகியம் ,
சிவாஜி கணேசனிடம் , தனக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லுவார் தமிழின தேசிய தலைவர் மேதகு எம்.ஆர் ராதா
"தேவாங்கு ராக்கெட் லேகியம்மு ஒண்ணு தயார் பண்றேன், சாப்பிட்டா அப்பிடி மேலேயும் கீழேயும் போய்ட்டு போய்ட்டு வரலாம்..."
சுவாதி கொலையாளிக்கு நீதிபதி என்ன தண்டனை அந்த ராம்குமாருக்கு கொடுக்கபோகின்றார் என்பது வேறுவிஷயம், ஆனால் ஒரு நாளைக்கு 4 முறை இந்த தேவாங்கு ராக்கெட் லேகியம் காமெடியினை பார்க்கவைத்தால் அதுவே பெரும் தண்டனை
கூடவே அந்த டயலாக்கினினை சொல்ல வைத்தால் நன்றாக இருக்கும் "தேவாங்கு ராக்கெட் லேகியம் சாப்பிட்டால் நுங்கம்பாக்கம் டு புழல் ஜெயில் போய்ட்டு போய்ட்டு வரலாம்.
Subscribe to:
Posts (Atom)